தனுஷ் 55ல் இணைந்தார் ஸ்ரீலீலா | போட்டோகிராபர் செய்த செயல் : கசப்பான அனுபவம் பகிர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ் | அட்லி, அல்லு அர்ஜுன் படப்பிடிப்பில் பிப்ரவரி முதல் இணையும் ஜான்வி கபூர் | ரஜினி 173வது படத்தின் கதை ஹாலிவுட் படத்தின் தழுவலா? | ஜூலையில் வெளியாகும் சூர்யா 46வது படம் | பெத்தி படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக் : இரவு காட்சிகளை பகலில் படமாக்கிய முதல் படம் | 2027 ஏப்ரல் 7 : வாரணாசி வெளியீட்டு தேதி அறிவிப்பு | கேரளா ஸ்டோரி இரண்டாவது பாகமும் பரபரப்பு கிளப்புகிறது | வேள்பாரி கதையில் நடிக்கப்போவது யார்? : ரஜினிக்கு கவுரவ வேடமா? |

ஷங்கர் தயாரிப்பில், பாலாஜி சக்திவேல் இயக்கத்தில், பரத், சந்தியாக நடித்த காதல் படத்தில் சினிமா வாய்ப்பு தேடும் இளைஞராக நடித்திருந்தவர் பல்லு பாபு. அந்த படத்தின் கேரக்டர் பெயரான விருச்சிககாந்த் என்பதையே தனது பெயராக வைத்துக் கொண்டார்.
அதன்பிறகு சில படங்களில் நடித்த அவர் சினிமா வாய்ப்புகள் இன்றி மிகவும் சிரமப்பட்டார். உறவினர்களால் கைவிடப்பட்ட விருச்சிககாந்த் வடபழனி முருகன் கோவில் வாசலில் பிச்சை எடுக்கும் செய்தி வெளியாகி சில நடிகர்கள் அவருக்கு உதவி செய்தார்கள்.
அதன்பிறகு கொரோனா காலத்தில் வேலைவாய்ப்பும் இல்லாமல், சினிமா வாய்ப்பும் இல்லாமல் மீண்டும் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்துள்ளார். இரவு நேரங்களில் பிளாட்பாரத்திலும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆட்டோவிலும் படுத்து உறங்கி உள்ளார். இந்த நிலையில நேற்று முன்தினம் இரவு ஆட்டோவில் படுத்தவர் அப்படியே மரணம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.