'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
ஷங்கர் தயாரிப்பில், பாலாஜி சக்திவேல் இயக்கத்தில், பரத், சந்தியாக நடித்த காதல் படத்தில் சினிமா வாய்ப்பு தேடும் இளைஞராக நடித்திருந்தவர் பல்லு பாபு. அந்த படத்தின் கேரக்டர் பெயரான விருச்சிககாந்த் என்பதையே தனது பெயராக வைத்துக் கொண்டார்.
அதன்பிறகு சில படங்களில் நடித்த அவர் சினிமா வாய்ப்புகள் இன்றி மிகவும் சிரமப்பட்டார். உறவினர்களால் கைவிடப்பட்ட விருச்சிககாந்த் வடபழனி முருகன் கோவில் வாசலில் பிச்சை எடுக்கும் செய்தி வெளியாகி சில நடிகர்கள் அவருக்கு உதவி செய்தார்கள்.
அதன்பிறகு கொரோனா காலத்தில் வேலைவாய்ப்பும் இல்லாமல், சினிமா வாய்ப்பும் இல்லாமல் மீண்டும் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்துள்ளார். இரவு நேரங்களில் பிளாட்பாரத்திலும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆட்டோவிலும் படுத்து உறங்கி உள்ளார். இந்த நிலையில நேற்று முன்தினம் இரவு ஆட்டோவில் படுத்தவர் அப்படியே மரணம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.