ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ரேணிகுண்டா, பில்லா 2, தென்மேற்கு பருவக்காற்று உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் கார்த்திக் எனும் தீப்பெட்டி கணேசன். சினிமாவில் போதிய வாய்ப்பு கிடைக்காததால் வேறு சில தொழில்களில் ஈடுபட்டு வந்தார். குறிப்பாக ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். கொரோனா காலக்கட்டத்தில் தான் மிகவும் கஷ்டப்படுவதாகவும், குழந்தைக்கு பால் வாங்க கூட பணமில்லை என கூறி கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டார். அதையடுத்து சிலர் அவருக்கு உதவினர்.
இந்நிலையில் உடல்நலக் குறைவால் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கணேசன் இன்று(மார்ச் 22) காலை மறைந்தார். இதுகுறித்து அவரின் மனைவி கூறுகையில், ‛‛ குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக கடந்த மார்ச் 9ல் எனது கணவரை, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதித்தோம். தொடர்ந்து உடல்நிலை நன்றாக தேறி வந்தது. இன்று வீட்டிற்கு செல்லலாம் என டாக்டர்கள் கூறியிருந்தனர். இதற்காக காலையில் தயாராக இருந்தோம். டீ கேட்டார், வாங்கி வந்து கொடுத்தேன். குடித்துவிட்டு நன்றாக தான் இருந்தார். திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்தது என கண்ணீர் மல்க கூறினார்.
மறைந்த தீப்பெட்டி கணேசனுக்கு ஒரு மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனர்.
தீப்பெட்டி கணேசனின் மறைவுக்கு இயக்குனர் சீனுராமசாமி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “எனது படங்களில் நடித்து வந்த சிறந்த நடிகன், தம்பி கார்த்தி என்ற தீப்பெட்டி கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் காலமான செய்தி கேட்டு உள்ளம் கலங்கினேன். அன்புநிறைய இதய அஞ்சலி கணேசா..” எனப் பதிவிட்டுள்ளார்.
ராகவா லாரன்ஸ் உதவி
இந்த நிலையில் தீப்பெட்டி கணேசனின் மரணத்தை தொடர்ந்து, இவரது குழந்தைகளின் படிப்பு செலவு, எதிர்காலம் ஆகியவற்றை தான் கவனித்து கொள்வதாக தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ். இதுகுறித்து ராகவா லாரன்ஸ் குறிப்பிடுகையில், “இவ்வருடம் அவரது பிள்ளைகளின் படிப்பு செலவுகளை நான் ஏற்றுக்கொண்டு செய்தேன். இனிவரும் காலத்திலும் என்னால் இயன்ற உதவிகளை அவரது குழந்திகளுக்கு செய்வேன் என கூறியுள்ளார்.