இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

நடிகை ராய் லட்சமி சமீபத்தில் கொரோனாவிலிருந்து மீண்டார். இவர் அளித்த பேட்டி : கொரோனா நிறைய பாடம் கற்று தந்துள்ளது. மனிதாபிமானமும், அடுத்தவர்களுக்கு உதவுவதும் அதிகமாகி உள்ளது. சினிமா மட்டுமல்லாது எல்லா துறையை சேர்ந்தவர்களுக்கு மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்க உணர வைத்துள்ளது. நாம் எதையெல்லாம் மறந்தோமோ அதையெல்லாம் திருப்பி தந்துள்ளது. எல்லாவற்றையும் விட ஏதோ மறு ஜென்மம் எடுத்த உணர்வையும், உயிரோடு இருப்பதே பெரிய விஷயம் என மகிழ்ச்சியடைய செய்யும்படி இந்த கொரோனா செய்திருக்கிறது என்றார்.