தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் | சைபர் கிரைமில் சின்மயி புகார் | பிரித்விராஜின் விலாயத் புத்தா ரிலீஸ் தேதி அறிவிப்பு | விஜய் நடிக்க மறுத்து, பின்னர் அவரை வருத்தப்பட வைத்த 'ஆட்டோகிராப்' | மீண்டும் காற்று வாங்கும் சிங்கிள் தியேட்டர்கள் : நிலைமை மாறுமா ? | காப்பி போஸ்டர் சர்ச்சையில் சிக்கிய 'ஜனநாயகன்' | ஒரு பக்கம் மராத்தி பாடல், மறுபக்கம் ஆங்கிலப் படம்… இசையால் பேசவைக்கும் இளையராஜா | சினேகா திருமணத்தை நடத்தி வைத்தேன் : இயக்குனர் சேரன் | மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் உணவு பொருட்கள் விலை : உச்சநீதிமன்றம் ஆதங்கம் | புதிய அப்டேட் கொடுத்த ராஜமவுலி |

மலையாள சினிமாவில் கடந்த இரண்டு வருடங்களில் கிடுகிடுவென வளர்ந்து முன்னணி கதாநாயகன் வரிசைக்கு உயர்ந்துள்ளவர் நடிகர் டொவினோ தாமஸ். தமிழில் மாரி- 2வில் தனுஷுக்கு வில்லனாக நடித்தவர் இவர் தான். தற்போது கைவசம் 6 படங்களுக்கு குறையாமல் வைத்துள்ளார். சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய டொவினோ தாமஸ், பிறந்தநாளில் புதிய முயற்சியாக 'டொவினோ தாமஸ் புரொடக்சன்ஸ்' என்கிற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளார்.
இதற்கு முன்னதாக அதாவது அவர் கடந்த நான்கு படங்களில், மற்ற தயாரிப்பாளர்களுடன் தன்னையும் இணை தயாரிப்பாளராக இணைத்து கொண்டிருந்தார்... அதன் காரணமாகத்தான் அவர் நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பு எந்த தொய்வுமின்றி உடனுக்குடன் முடிவடைந்து வந்தது.. இந்தநிலையில் தான், தானே தனியாக தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ளார். இதில் தனது படங்கள் மட்டும் அல்லாமல், திறமையான கலைஞர்களின் படங்களையும் தயாரிக்க இருப்பதாக கூறியுள்ளார் டொவினோ தாமஸ்.