அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் | ‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு |
மலையாள சினிமாவில் கடந்த இரண்டு வருடங்களில் கிடுகிடுவென வளர்ந்து முன்னணி கதாநாயகன் வரிசைக்கு உயர்ந்துள்ளவர் நடிகர் டொவினோ தாமஸ். தமிழில் மாரி- 2வில் தனுஷுக்கு வில்லனாக நடித்தவர் இவர் தான். தற்போது கைவசம் 6 படங்களுக்கு குறையாமல் வைத்துள்ளார். சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய டொவினோ தாமஸ், பிறந்தநாளில் புதிய முயற்சியாக 'டொவினோ தாமஸ் புரொடக்சன்ஸ்' என்கிற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளார்.
இதற்கு முன்னதாக அதாவது அவர் கடந்த நான்கு படங்களில், மற்ற தயாரிப்பாளர்களுடன் தன்னையும் இணை தயாரிப்பாளராக இணைத்து கொண்டிருந்தார்... அதன் காரணமாகத்தான் அவர் நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பு எந்த தொய்வுமின்றி உடனுக்குடன் முடிவடைந்து வந்தது.. இந்தநிலையில் தான், தானே தனியாக தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ளார். இதில் தனது படங்கள் மட்டும் அல்லாமல், திறமையான கலைஞர்களின் படங்களையும் தயாரிக்க இருப்பதாக கூறியுள்ளார் டொவினோ தாமஸ்.