நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
மலையாள சினிமாவில் கடந்த இரண்டு வருடங்களில் கிடுகிடுவென வளர்ந்து முன்னணி கதாநாயகன் வரிசைக்கு உயர்ந்துள்ளவர் நடிகர் டொவினோ தாமஸ். தமிழில் மாரி- 2வில் தனுஷுக்கு வில்லனாக நடித்தவர் இவர் தான். தற்போது கைவசம் 6 படங்களுக்கு குறையாமல் வைத்துள்ளார். சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய டொவினோ தாமஸ், பிறந்தநாளில் புதிய முயற்சியாக 'டொவினோ தாமஸ் புரொடக்சன்ஸ்' என்கிற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளார்.
இதற்கு முன்னதாக அதாவது அவர் கடந்த நான்கு படங்களில், மற்ற தயாரிப்பாளர்களுடன் தன்னையும் இணை தயாரிப்பாளராக இணைத்து கொண்டிருந்தார்... அதன் காரணமாகத்தான் அவர் நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பு எந்த தொய்வுமின்றி உடனுக்குடன் முடிவடைந்து வந்தது.. இந்தநிலையில் தான், தானே தனியாக தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ளார். இதில் தனது படங்கள் மட்டும் அல்லாமல், திறமையான கலைஞர்களின் படங்களையும் தயாரிக்க இருப்பதாக கூறியுள்ளார் டொவினோ தாமஸ்.