காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் |
பெங்களூரு நாகரபாவியை சேர்ந்தவர் யுவராஜ் . ஜோதிடரான இவர் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக சமீபத்தில் கைதானார். விசாரணையில் கன்னட நடிகை குட்டி ராதிகாவிற்கு 1.25 கோடி கொடுத்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இது தொடர்பான ஆதாரங்கள் போலீசாருக்கு கிடைத்தது. இதை தொடர்ந்து இது தொடர்பாக போலீஸ் முன் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு போலீசார் குட்டி ராதிகாவுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள குட்டி ராதிகா, "யுவராஜ் எங்கள் குடும்ப ஜோதிடர், அவரிடம் கேட்டுத்தான் நாங்கள் எந்த காரியத்தையும் தொடங்குவோம். அவர் சொல்வதெல்லாம் அப்படியே நடந்திருக்கிறது. அவர் தற்போது மோசடி வழக்கில் கைதாகி இருப்பது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
யுவராஜ் ஒரு சரித்திரப் படம் தயாரிப்பதாக இருந்தார். அதில் நான் நடிக்க ஒப்பந்தமானேன். எனக்கு சம்பளமாக பேசப்பட்ட தொகைக்கு முன் பணமாக 1.25 கோடியை 2 தவணையாக கொடுத்துள்ளார். இதுதவிர மற்ற அவரது வரவு செலவுகள் எதுவும் எனக்குத் தெரியாது" என்று கூறியிருக்கிறார்.
தமிழில் இயற்கை உள்பட பல படங்களில் நடித்தவர் குட்டி ராதிகா. கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருந்தார். முன்னாள் முதல்வர் குமாரசமாமியின் இரண்டாவது மனைவியாக வாழ்ந்து வருகிறார். அவருக்கு ஒரு மகள் இருக்கிறார்.