மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் | கண்ணப்பா படப்பிடிப்பை நிறைவு செய்த அக்சய் குமார் | ஹீரோக்களுக்கு எதிராக ஹீரோக்களே வசனம் பேசும் புதிய ட்ரெண்ட் | தனது வருங்கால மனைவியை மோகன்லாலுக்கு அறிமுகப்படுத்திய காளிதாஸ் | விஜய் மகன் படத்தில் நடிக்க அழைத்தது உண்மைதான் : கவின் | திடீரென கதை சர்ச்சையை கிளப்பிய கதாசிரியருக்கு நிவின்பாலி பட தயாரிப்பாளர் கண்டனம் | வேட்டைக்காரன், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, மாவீரன் - ஞாயிறு திரைப்படங்கள் |
'பசங்க, மெரினா, வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா' ஆகிய படங்களை இயக்கிய பாண்டிராஜ் 2013ம் ஆண்டு சிம்புவை நாயகனாக வைத்து 'இது நம்ம ஆளு' படத்தை ஆரம்பிக்கும் போதே திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் ஆச்சரியப்பட்டனர். இந்தப் படம் ஒழுங்காக முடிவடைந்து திரைக்கு வருமா என்று பலரும் கேள்விகளை எழுப்பினர். ஆனால், பாண்டிராஜோ, அதையெல்லாம் சரியாக முடித்து விடுவேன் என்று பலரது கேள்விகளுக்குப் பதிலளித்தார். இருந்தாலும், கடைசியில் சிம்புவின் அலையில் பாண்டிராஜும் வீழ்ந்துவிட்டார். சொன்னபடி படத்தை முடித்துக் கொடுப்பதில் சிம்புவும், படத்திற்கு இசையைமத்த சிம்புவின் தம்பி குறளரசனும் இழு...இழு...என்று இழுத்ததில் ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக படம் இன்னமும் முடியாமல் இருக்கிறது.
கடந்த சில நாட்களாக டிஆர், பாண்டிராஜ் மீது புகார் கொடுத்தார் எனவும், பதிலுக்கு பாண்டிராஜும் டிஆர் மீது புகார் கொடுத்தார் எனவும் செய்திகள் வந்து கொண்டிருந்தன. இந்த நிலையில் நேற்று பாண்டிராஜ் 'இது நம்ம ஆளு' பற்றி வாய் திறந்திருக்கிறார். “எஸ்டிஆர் ரசிகர்களுக்கு, 'இது நம்ம ஆளு' என்னுடைய வாழ்க்கையில் முக்கியமான படம். எப்படியிருந்தாலும் படத்தை கூடிய சீக்கிரம் வெளியிட்டு விடுவோம். எஸ்டிஆரை நீங்கள் புதிய கோணத்தில் பார்க்கப் போகிறீர்கள்,” எனக் கூறியிருக்கிறார்.
ஆக, அனைத்துப் பிரச்சனைகளிலும் காம்ப்ரமைஸ் செய்து கொண்டு படத்தை முடித்துத் தர பாண்டிராஜ் தயாராகிவிட்டார் என்று இதிலிருந்து தெரிகிறது.