‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் | கண்ணப்பா படப்பிடிப்பை நிறைவு செய்த அக்சய் குமார் | ஹீரோக்களுக்கு எதிராக ஹீரோக்களே வசனம் பேசும் புதிய ட்ரெண்ட் | தனது வருங்கால மனைவியை மோகன்லாலுக்கு அறிமுகப்படுத்திய காளிதாஸ் | விஜய் மகன் படத்தில் நடிக்க அழைத்தது உண்மைதான் : கவின் | திடீரென கதை சர்ச்சையை கிளப்பிய கதாசிரியருக்கு நிவின்பாலி பட தயாரிப்பாளர் கண்டனம் | வேட்டைக்காரன், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, மாவீரன் - ஞாயிறு திரைப்படங்கள் | பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது |
என்ன பேசுகிறோம் என தெரிந்தே, எகிடு தகிடாக எதையாவது பேசி, வான்ட்டடாக வம்பை விலைகொடுத்து வாங்குவதில் சர்ச்சை நாயகன் இயக்குனர் ராம்கோபால் வர்மாவை அடித்துக்கொள்ள ஆளில்லை. சில மாதங்களுக்கு முன் தெலுங்கு மெகாஸ்டார் சிரஞ்சீவியின் 15௦0வது படத்தை சிரஞ்சீவியே இயக்கினால், அது நிச்சயம் அவரது முந்தைய கண்டுபிடிப்பான பிரஜா ராஜ்ஜியம் கட்சியை விட மோசமாக இருந்துவிடாது என்று நம்பலாம்” என அவரை மோசமாக விமர்சித்தார்.
இப்போது லேட்டஸ்ட்டாக அவரது வாய்க்கு அவலாக சிக்கியிருப்பவர் மலையாள மெகாஸ்டார் மம்முட்டி.. சமீபத்தில் வெளியான 'ஓ காதல் கண்மணி' படத்தை பார்த்துவிட்டு “தனது மகனை பார்த்தாவது மம்முட்டி எப்படி இயல்பாக நடிப்பது என்பதை கற்றுக்கொள்ள வேண்டும்.. இத்தனை வருடங்களாக அவர் செய்யாததை, வந்த சில வருடங்களிலேயே அவரது மகன் துல்கர் சல்மான் செய்துகாட்டி மலையாளிகளை பெருமைப்பட வைத்துவிட்டார்.” என மகனை புகழ்ந்துள்ள அதே நேரத்தில், தந்தையின் நடிப்பை அவமானப்படுத்தும் விதமாக டுவீட் போட்டுள்ளார்.