மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் | கண்ணப்பா படப்பிடிப்பை நிறைவு செய்த அக்சய் குமார் | ஹீரோக்களுக்கு எதிராக ஹீரோக்களே வசனம் பேசும் புதிய ட்ரெண்ட் | தனது வருங்கால மனைவியை மோகன்லாலுக்கு அறிமுகப்படுத்திய காளிதாஸ் | விஜய் மகன் படத்தில் நடிக்க அழைத்தது உண்மைதான் : கவின் | திடீரென கதை சர்ச்சையை கிளப்பிய கதாசிரியருக்கு நிவின்பாலி பட தயாரிப்பாளர் கண்டனம் | வேட்டைக்காரன், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, மாவீரன் - ஞாயிறு திரைப்படங்கள் |
தன்னுடன் எந்த நடிகை நடித்தாலும் அவர்களுடன் உயிர்த்தோழராகி விடுவார் ஜெயம்ரவி என்கிறார்கள். அதிலும் நயன்தாராதான் அவரது நீண்டகால கனவு கன்னி. அதனால் அவருடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்று நினைத்திருந்தவருக்கு இப்போது தனி ஒருவன் படத்தில் அந்தவாய்ப்பு கிடைத்திருப்பதால் செம குஷியில் நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.
ஆனால் இதைப்பற்றி ஜெயம்ரவியைக் கேட்டால், நயன்தாரா நல்ல நடிகை. அவரது நடிப்பை நான் ரசித்திருக்கிறேன். மற்றபடி அவருடன் குஷியுடன் நடிக்கிறேன் என்று சொல்ல முடியாது. காரணம், அவர் நல்ல பர்பாமென்ஸ் ஆர்ட்டிஸ்ட். அதனால் அவருடன் போட்டி போட்டுத்தான் நடித்துக்கொண்டிருக்கிறேன்.
மற்றபடி நான் என்னுடன் நடிக்கும் அனைத்து நடிகைகளுடனும் உயிர்த்தோழராகி விடுவேன் என்று சொல்வதும் தவறு. என்னைப்பொறுத்தவரை எல்லோரிடமும் இயல்பாக பழகுவேன். மற்றபடி அந்தந்த படங்களில நடித்து முடித்தும் அவர்கள் யாரோ நான் யாரோ என்றாகி விடுவோம். ஆனால் ஜெனிலியா மட்டும்தான் எனது பெஸ்ட் ப்ரண்ட்.
அவருடன் சந்தோஷ் சுப்பிரமணியன் படத்தில் நடித்தபோது நல்ல தோழியாகி விட்டார். இப்போதும் அடிக்கடி போன் செய்து நலம் விசாரிப்பார். அந்த வகையில் எனது குடும்ப நண்பர் என்று சொல்லிக்கொள்ளக்கூடிய பெருமைக்குரிய நடிகை ஜெனிலியா என்கிறார் ஜெயம்ரவி.