Advertisement

சிறப்புச்செய்திகள்

மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் | கண்ணப்பா படப்பிடிப்பை நிறைவு செய்த அக்சய் குமார் | ஹீரோக்களுக்கு எதிராக ஹீரோக்களே வசனம் பேசும் புதிய ட்ரெண்ட் | தனது வருங்கால மனைவியை மோகன்லாலுக்கு அறிமுகப்படுத்திய காளிதாஸ் | விஜய் மகன் படத்தில் நடிக்க அழைத்தது உண்மைதான் : கவின் | திடீரென கதை சர்ச்சையை கிளப்பிய கதாசிரியருக்கு நிவின்பாலி பட தயாரிப்பாளர் கண்டனம் | வேட்டைக்காரன், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, மாவீரன் - ஞாயிறு திரைப்படங்கள் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காணாமல் போன அனுஷ்கா..! காரணம் என்ன?

09 செப், 2014 - 10:32 IST
எழுத்தின் அளவு:

கடந்த சில வருடங்களாக தமிழ்ப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்த அனுஷ்காவை அண்மைக்காலமாக அவ்வளவாக காணமுடியவில்லை. தற்போது தமிழில் அனுஷ்கா நடிப்பது இரண்டே படங்கள்தான். ஒன்று...ரஜினியுடன் லிங்கா, மற்றொன்று..கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம். தமிழ்ப்படங்களில் நடிப்பதை அனுஷ்கா வெகுவாக குறைத்துவிட்டது ஏன்? அவர் நடிக்கும் ருத்ரமாதேவி, பாகுபலி ஆகிய இந்த இரண்டு தெலுங்குப்படங்கள்தான் காரணம்...! இவற்றில் பாகுபலி எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கும் படம்.


ருத்ரம்மாதேவியை இயக்கி வருபவர் குணசேகர். முழுக்க முழுக்க கதாநாயகியை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட அருந்ததி படம் மிகப்பெரிய வெற்றியடைந்து, அனுஷ்காவுக்கும் மிகப்பெரிய பெயரை தேடிக்கொடுத்தது. எனவே அதேபோன்று முழுக்க முழுக்க கதாநாயகியை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ருத்ரமாதேவி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் அனுஷ்கா. இப்படத்தில் காகத்தியா நாட்டின் ராணி ருத்ரம்மா தேவியாக அனுஷ்கா நடிக்கிறார். இந்த கதாபாத்திரத்துக்கு அவசியம் என்பதால் வாள் பயிற்சி, குதிரையேற்றம் என பலவற்றையும் கற்றுக்கொண்டு இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வந்தார் அனுஷ்கா.


ருத்ரமாதேவி படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கியது. கடந்த 19 மாதங்களாக நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில்தான் ஹைதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது. கடைசிகட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததை தொடர்ந்து தற்போது ருத்ரமாதேவி படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தியாவின் முதல் 3டி வரலாற்றுப் படம் என்ற பெருமையோடு உருவாகி வருகிறது - ருத்ரமாதேவி.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)