மீண்டும் வருகிறோம்- மங்காத்தா படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்ட வெங்கட் பிரபு! | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் தேரே இஸ்க் மெய்ன்! | விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ்குமார் வரிசையில் கங்கை அமரன், தேவிஸ்ரீ பிரசாத் | 25 ஆண்டுகளுக்கு பின் மறுமணமா : பார்த்திபனின் 'நச்' பதில் | ஜனநாயகன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு; நீதிமன்ற முழு வாதங்கள் இதோ... | மீண்டும் அப்பாவாகிறார் அட்லி | பிளாஷ்பேக் : ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ரகுவரன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் இரண்டு கதைகள் | ஜப்பானில் 'புஷ்பா 2' படத்திற்கு குறைவான வரவேற்பு | உண்மை சம்பவங்கள் பின்னணியில் 'மை லார்ட்' |
1980ம் ஆண்டு வெளிவந்த நிழல்கள் படத்தில் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் ரோகினி. பூங்கதவே தாழ் திறவாய்... என்ற வைரமுத்துவின் வரிகளுக்கு எளிமையான அழகு சேர்த்தவர். பாரதிராஜாவின் அறிமுகங்களில் பெரிய அளவில் வளரமுடியாமல் போனவர்கள் நிழல்கள் ரோகினியும், என் உயிர் தோழன் ரமாவும் தான்.
நிழல்கள் படத்திற்கு பிறகு சரியான வாய்ப்புகள் இல்லாமல் போகவே சில வருடங்களுக்கு பிறகு திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். முறைப்படி நடனம் கற்றிருந்த ரோகினி அங்கு நடனப்பள்ளி நடத்துகிறார். தற்போது சென்னையில் ஒரு நாட்டிய நாடகம் நடத்துவதற்காக வந்துள்ளார்.
வந்தவர் நேராக பாரதிராஜாவை சந்தித்து வாழ்த்தும், ஆசியும் பெற்றிருக்கிறார். மீண்டும் நடிக்க சம்மதமா என்று கேட்டிருக்கிறார் பாரதிராஜா. அதற்கு ரோகினியும் சம்மதம் தெரிவித்திருக்கிறார். அனேகமாக பாரதிராஜாவின் அடுத்த படமான நேற்று மழை பெய்யும் படத்தில் ரோகினி நடிக்கலாம் என்று தெரிகிறது. 34 வருடங்களுக்கு பிறகு சினிமாவுக்கு திரும்பும் ரோகினி இன்னும் அப்படியே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: நிழல்கள் படத்தில் நடிக்கும்போது நான் 9வது வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அடுத்தடுத்து படிப்பில் கவனம் செலுத்தியதால் நடிப்பு பக்கம் வரவில்லை. கை கொடுக்கும் கை படத்திலும், புன்னகை மன்னன் படத்திலும் ரேவதி நடித்த கேரக்டர்கள் எனக்கு வந்தவைதான். அப்போது அதை தவற விட்டதை நினைத்து இப்போது வருந்துகிறேன். மீண்டும் பாரதிராஜா சாரை சந்தித்தபோது நடிக்கிறீயா என்று கேட்டார். உங்க படம்னா நடிக்கிறேன் சார்னு சொல்லியிருக்கேன். என்கிறார் ரோகினி.




