வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

2019ல் வெளியான 'உப்பெனா' படம் மூலம் அறிமுகமானவர் கிர்த்தி ஷெட்டி. அறிமுகப் படமே அவருக்கு பெரிய வெற்றியையும் வரவேற்பையும் பெற்றுத் தந்தது. அதன்பின் நடித்த 'ஷியாம் சிங்க ராய்' படமும் பெயரைத் தேடித் தந்தது. அதன்பின் தெலுங்கில் சில படங்களை நடித்ததுடன் தமிழ், மலையாளத்திலும் அறிமுகமானார்.
தமிழ், தெலுங்கில் தயாரான 'த வாரியர்' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதற்கடுத்தும் தமிழ், தெலுங்கில் தயாரான 'கஸ்டடி' படத்திலும் கதாநாயகியாக நடித்தார். பொங்கலுக்கு வெளிவந்த 'வா வாத்தியார்' படத்திலும் கார்த்தி ஜோடியாக நடித்தார். தமிழில் தொடர்ந்து நடித்த மூன்று படங்களும் ஓடவேயில்லை. அதே சமயம் அவரது மலையாள அறிமுகப் படமான 'எஆர்எம்' படம் 100 கோடி வசூலைக் குவித்தது.
தெலுங்கு, மலையாளத்தில் வெற்றியைப் பார்த்தவருக்கு தமிழில் மட்டும் மூன்று படங்களில் நடித்தும் வெற்றி கிடைக்காமல் உள்ளது. அடுத்து 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஜோடியாகவும், 'ஜீனி' படத்தில் ரவி மோகன் ஜோடியாகவும் நடித்துள்ளார். அடுத்தடுத்து வர உள்ள இந்தப் படங்கள்தான் கிர்த்தியை தமிழ் சினிமாவில் காப்பாற்ற வேண்டும்.




