வாரணாசி வெளிநாட்டு உரிமை தான் ராஜமவுலியின் சம்பளம்? | ஆபாச தாக்குதல் : ஈஷா ரெப்பா போலீஸில் புகார் | மூன்றாம் பாகத்தோடு திரிஷ்யம் முடிவடைகிறது : ஜீத்து ஜோசப் | துரந்தர் 2 படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த விக்கி கவுசல், யாமி கவுதம் | யூத் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகிறது | அதர்வா இரு வேடங்களில் நடிக்கும் ‛வலை' | 2 கோடி வசூலுக்கு 30 லட்சம் கணக்கு சொன்ன வினியோகஸ்தர் : ஆர்கே செல்வமணி அதிர்ச்சித் தகவல் | ‛ஊருக்கு ரெண்டு ஊதாரி' என்ன மாதிரியான படம் | காவல் நிலையத்தில் நடக்கும் கதை | 'லெகசி' வெப் தொடரில் கேங்ஸ்டர் ஆக மாதவன் |

தமிழ், தெலுங்கில் நடித்து வருபவர் ஈஷா ரெப்பா. தமிழில் ஓய், நித்தம் ஒரு வானம் ஆகிய படங்களில் நடித்தார். தற்போது தெலுங்கில் பரவலாக நடித்து வருகிறார். உடற்கேலி குறித்து இவர் கூறுகையில், ‛‛சினிமாவிற்கு வந்த புதிதில் தயாரிப்பாளர் ஒருவர் எனது போட்டோவை லேப்டாபில் பெரிதாக்கி முழங்கைகள் கருமையாக இருப்பதை குறிப்பிட்டு, இன்னும் அழகாக இருக்கணும் என்றார். இது என்னை காயப்படுத்தியது, சோர்வாக்கியது. தொடர்ந்து இதுபோன்று நிறைய பாடிஷேமிங்கை திரையுலகில் சந்தித்தேன். என் பிறப்பை மாற்ற முடியாது. இதுபோன்ற விஷயங்களை புறம்தள்ளிவிட்டு தன்னம்பிக்கையுடன் வாழ பழகினேன்'' என்றார்.




