Advertisement

சிறப்புச்செய்திகள்

8 வார இடைவெளியில் ஓடிடி, தயாரிப்பாளர்கள் சம்மதிப்பார்களா? | அல்லு சினிமாஸ் 'புகழ் சுவர்' - அட்லிக்கு இடம் தந்த அல்லு அர்ஜுன் | மார்ச் 15 முதல் புதிய படங்களுக்கு சப் டைட்டில், ஆடியோ விளக்கம் கட்டாயம் | லாரி ஏறிச் சென்று படம் பார்த்தேன்: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி | காதல் பிரிவில் அர்ஜுன் தாஸ்? | வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக்: நடிகர் முத்துராமனின் திரைப்பயணத்திற்கு திருப்புமுனையாய் அமைந்த “நெஞ்சில் ஓர் ஆலயம்”

13 ஜன, 2026 - 05:55 IST
எழுத்தின் அளவு:
Flashback-“Nenjil-Ore-Alayam”-was-a-turning-point-in-actor-Muthuramans-film-career
Advertisement


தனித்துவமிக்க குரல் வளமும், அழகிய தமிழ் உச்சரிப்போடு கூடிய இயல்பான நடிப்பும் ஒருங்கே அமையப் பெற்று, 1960 மற்றும் 70களில் 'நவரசத் திலகம்' என தமிழ் திரைப்பட ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு திரைக்கலைஞர்தான் நடிகர் முத்துராமன். பள்ளிப் பருவத்தின்போதே நாடகத்தின் மீது நாட்டம் அதிகமாகி, அதன் காரணமாக வைரம் நாடகக் கம்பெனியில் இணைந்து, நாடகங்களில் சிறு சிறு வேடமேற்று நடித்து வந்தார்.

பின்னர் சில வருடங்களுக்குப் பின் அங்கிருந்து வெளியேறி, தனது நண்பர்களோடு இணைந்து சொந்தமாக நாடகக் குழு ஒன்றை ஆரம்பித்து, 'நீதிபதி' என்ற நாடகத்தை நடத்தினார். ஓரிரு ஆண்டுகளுக்குப் பின் நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரன் நடத்தி வந்த நாடகக் குழுவிலும் இணைந்து நடித்து, அதன் பின்னர் நடிகர் எஸ் வி சகஸ்ரநாமம் நடத்தி வந்த 'சேவா ஸ்டேஜ்' என்ற நாடகக் கம்பெனியிலும் ஒரு நடிகராக பயணித்து வந்தார். இந்த நிலையில், இதில் நிரந்தரத் தன்மையும், போதிய வருமானமும் இல்லை என தீர்மானித்து, கலை வாழ்வே வேண்டாம் என முடிவெடுத்து, சென்னையை விட்டு கிளம்ப முடிவு செய்திருந்தபோதுதான் அந்த சினிமா வாய்ப்பு இவரைத் தேடி வந்தது.

இந்த இடைப்பட்ட காலங்களில் “ரங்கூன் ராதா”, “மாலா ஒரு மங்கல விளக்கு”, “நாலு வேலி நிலம்”, “சகோதரி”, “படிக்காத மேதை”, “அரசிளங்குமரி” போன்ற பல படங்களில் சிறு சிறு வேடங்களில் இவர் நடித்திருந்தபோதும், ஒரு அங்கீகாரம் பெற்ற நடிகராக அறியப்படாத நிலையே இவரைப் பீடித்திருந்தது. அப்போதுதான் இயக்குநர் சி வி ஸ்ரீதர், “சித்ராலயா” என்ற பெயரில் சொந்தப் படத் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்திருந்தார். அதன் முதல் படமாக அவர் எடுக்க நினைத்த திரைப்படம்தான் “நெஞ்சில் ஓர் ஆலயம்”. முதல் படமே சோகப் படமாக எடுக்க வேண்டாம் என நினைத்த இயக்குநர் ஸ்ரீதர், நகைச்சுவையோடு கூடிய ஒரு காதல் கதையை தர நினைத்து, “சித்ராலயா”வின் முதல் திரைப்படமாக அவர் தயாரித்து வெளியிட்ட திரைப்படம்தான் “தேன் நிலவு”.

கலை வாழ்வே வேண்டாம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட நடிகர் முத்துராமனைத் தேடி, ஒரு நாள் 'சித்ராலயா' அலுவலகத்திலிருந்து வந்த ஒருவர், இயக்குநர் ஸ்ரீதர் உங்களை உடனே அழைத்து வரச் சொன்னார் என்ற செய்தியைச் சொல்ல, சில காலங்களுக்கு முன்பு சென்னையில் 'சேவா ஸ்டேஜ்' நாடகக் குழுவினாரால் அரங்கேற்றப்பட்ட 'வடிவேலு வாத்தியார்' என்ற இவர் நடித்திருந்த நாடகத்தைப் பார்ப்பதற்கு இயக்குநர் ஸ்ரீதரும், இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணனும் வந்திருந்தது நடிகர் முத்துராமனின் நினைவிற்கு வர, உடனே இயக்குநர் ஸ்ரீதரை நேரில் சந்திக்கச் சென்றார். அவரை சந்தித்ததன் விளைவுதான் நடிகர் முத்துராமனுக்குக் கிடைத்த “நெஞ்சில் ஓர் ஆலயம்” பட வாய்ப்பு.

படத்தில் சீதா என்ற கதாபாத்திரத்தில் நடித்த கதையின் நாயகி தேவிகாவின் கணவர் வேடத்தில், நடிகர் முத்துராமனை நடிக்க வைத்திருந்ததோடு, “நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை” என்ற காலத்தால் அழியா ஒரு காவியப் பாடலுக்கும் வாயசைத்து நடிக்கும் நல் வாய்ப்பினையும் தந்திருந்தார் இயக்குநர் ஸ்ரீதர். இதனைத் தொடர்ந்து அடுத்து வந்த இயக்குநர் ஸ்ரீதரின் முதல் முழுநீள நகைச்சுவைத் திரைப்படமும், முதல் முழுநீள ஈஸ்ட்மென் வண்ணத் திரைப்படமுமான “காதலிக்க நேரமில்லை” திரைப்படத்தின் நாயகர்களில் ஒருவராக நடிக்கும் வாய்ப்பினையும் பெற்றுத் தந்து, பின்னாளில் தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத நாயகர்களில் ஒருவராக உயர்வு பெற காரணமாகவும் அமைந்ததோடு, நடிகர் முத்துராமனின் கலையுலகப் பயணத்தில் ஒரு மாபெரும் திருப்பத்தைத் தந்த திரைப்படமாகவும் அமைந்ததுதான் இந்த “நெஞ்சில ஓர் ஆலயம்”.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தெலுங்கில் குத்தாட்டம் போட்ட சான்வி மேக்னாதெலுங்கில் குத்தாட்டம் போட்ட சான்வி ... ஜனநாயகன் சென்சார் பிரச்னை.... : எல்லாம் நன்மைக்கே என்கிறார் விமல் ஜனநாயகன் சென்சார் பிரச்னை.... : எல்லாம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap