வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு கின்னஸ் சாதனை படைத்த 'அகடம்' மற்றும் 'நாகேஷ் திரையரங்கம்' திரைப்படங்களை இயக்கிய இசாக், அடுத்து 'வெகுளி' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் மூலம் பாடலாசிரியர் பிரியன் நாயகனாக அறிமுகமாகிறார். திவ்யா நாயர் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இவர்களுடன் 'பாய்ஸ்' மணிகண்டன், டேனி, சாப்ளின் பாலு, பூவையார், இமான் அண்ணாச்சி, சர்மி ரவி, சேரன் ராஜ், ரென், ஈரோடு சரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். நாகார்ஜூன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜே.ஷமீல் இசை அமைத்துள்ளார்.
படம் குறித்து இயக்குனர் இசாக் கூறும்போது, “நாட்டில் நடக்கும் ஒரு கொடூர செயலை அடிப்படையாகக் கொண்டு இதுவரை சொல்லாத கருத்தை வலியுறுத்தி புதிய கோணத்தில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. அடுத்தது என்ன? என்று யூகிக்க முடியாத வகையில் இப்படம் உருவாகியுள்ளது. சென்னை மற்றும் சுற்றுபுறங்களில் படம் முழுவதும் படமாக்கப்பட்டுள்ளது” என்றார். ஏற்கெனவே சினேகன், பா.விஜய் போன்றவர்கள் நடிகராகி இருக்கும் நிலையில் தற்போது பிரியனும் நடிகராகி இருக்கிறார்.




