Advertisement

சிறப்புச்செய்திகள்

8 வார இடைவெளியில் ஓடிடி, தயாரிப்பாளர்கள் சம்மதிப்பார்களா? | அல்லு சினிமாஸ் 'புகழ் சுவர்' - அட்லிக்கு இடம் தந்த அல்லு அர்ஜுன் | மார்ச் 15 முதல் புதிய படங்களுக்கு சப் டைட்டில், ஆடியோ விளக்கம் கட்டாயம் | லாரி ஏறிச் சென்று படம் பார்த்தேன்: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி | காதல் பிரிவில் அர்ஜுன் தாஸ்? | வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக்: தமிழ் திரையுலகிற்கு டி எம் சவுந்தரராஜன் என்ற பாடகரை அடையாளம் காட்டிய “தூக்கு தூக்கி”

22 டிச, 2025 - 12:01 IST
எழுத்தின் அளவு:
Flashback-“Thookku-Thookki”-introduced-singer-TM-Soundararajan-to-the-Tamil-film-industry
Advertisement


ஆளுமை மிக்க ஆண் குரலாக ஆறு தசாப்தங்களுக்கும் மேல் தமிழ் திரையிசையை தனது கந்தர்வக் குரலின் கட்டுக்குள் வைத்திருந்தவரும், எம் ஜி ஆர், சிவாஜி என்ற இரு பெரும் ஜாம்பவான்களின் குரலாகவே பயணித்து வந்தவருமான பின்னணிப் பாடகர் டி எம் சவுந்தரராஜன், ஆரம்ப காலங்களில் “கிருஷ்ண பக்தி”, “மந்திரி குமாரி” போன்ற ஒரு சில திரைப்படங்களில் ஓரிரு பாடல்களைப் பாடி, தமிழ் திரையிசையில் தனது பங்களிப்பை காட்டியிருந்தாலும், அவரை ஒரு முதன்மை பின்னணிப் பாடகராக அடையாளம் காட்டிய திரைப்படமாக வெளிவந்த திரைப்படம்தான் “தூக்கு தூக்கி”.

மேடை நாடகமாக அரங்கேறி, பின் சினிமா வடிவம் பெற்ற இந்தக் கதை, 1935ம் ஆண்டிலேயே இதே பெயரில் சி வி வி பந்துலு, கே டி ருக்மணி ஆகியோரின் நடிப்பில் சினிமாவாக வெளிவந்திருந்தது. மீண்டும் 19 ஆண்டுகளுக்குப் பின் சிவாஜிகணேசன், லலிதா, பத்மினி, ராகினி, டி எஸ் பாலையா ஆகியோரின் நடிப்பில் 1954ம் ஆண்டும் அதே பெயரிலேயே திரைப்படமாக வெளிவந்தது. “கொண்டுவந்தால் தந்தை, கொண்டுவந்தாலும் வராவிட்டாலும் தாய், சீர் தந்தால் தங்கை, கொலையும் செய்வாள் பத்தினி, உயிர்காப்பான் தோழன்” என்ற பழமொழிகள்தான் இத்திரைப்படத்தின் கதைச் சுருக்கம்.

இத்திரைப்படத்தின் கதாநாயகன் நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு பின்னணி பாடுவதற்காக பாடலாசிரியர் அ மருதகாசியின் சிபாரிசின் பேரில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார் டி எம் சவுந்தரராஜன். 1952ம் ஆண்டு தனது முதல் திரைப்படமான “பராசக்தி”யில் தனக்காக பின்னணி பாடிய சி எஸ் ஜெயராமனே இத்திரைப்படத்திலும் தனக்காக பாடவேண்டும் என்பது நடிகர் சிவாஜிகணேசனின் விருப்பமாக இருந்து வந்த நிலையில், பாடகர் டி எம் சவுந்தரராஜன் படத்தின் தயாரிப்பாளர்களிடம் மூன்றே மூன்று பாடல்களை மட்டும் இத்திரைப்படத்திற்காக தன்னைப் பாட அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டதோடு, அதன்பின் அந்தப் பாடல்கள் நடிகர் சிவாஜிகணேசனுக்குப் பிடிக்காமல் போகும் பட்சத்தில் தானே வெளியேறிவிடுவதாக சொன்ன பின்பு பாடல்கள் பதிவு செய்யப்பட்டது.

பதிவு செய்யப்பட்ட பாடல்களைக் கேட்ட நடிகர் திலகம் சிவாஜிகணேசன், டி எம் சவுந்தரராஜன் குரலால் வெகுவாக ஈர்க்கப்பட்டதோடு, படத்தின் அனைத்துப் பாடல்களையும் அவரையே பாட வைக்கவும் ஒப்புக் கொண்டார். “ஏறாத மலைதனிலே”, “சுந்தரி சவுந்தரி நிரந்தரியே”, “பெண்களை நம்பாதே கண்களே பெண்களை நம்பாதே”, “அபாய அறிவிப்பு அய்யா அபாய அறிவிப்பு”, “குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்”, “கண்வழி புகுந்து கருத்தில் கலந்த” என்று படத்தின் அத்தனைப் பாடல்களும் டி எம் சவுந்தரராஜன் குரலில் பதிவு செய்யப்பட்டு சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. இந்தத் திரைப்படத்திற்குப் பின் தமிழ் திரையிசையின் தவிர்க்க முடியாத குரலாக ஓங்கி ஒலித்ததோடு, எம் ஜி ஆர் மற்றும் சிவாஜியின் குரலாகவே வாழ்ந்தவர்தான் நம் 'இசையரசர்' டி எம் சவுந்தரராஜன்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரிபிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாகும் ... படையப்பாவை பார்த்து ரசித்த நீலாம்பரி படையப்பாவை பார்த்து ரசித்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap