8 வார இடைவெளியில் ஓடிடி, தயாரிப்பாளர்கள் சம்மதிப்பார்களா? | அல்லு சினிமாஸ் 'புகழ் சுவர்' - அட்லிக்கு இடம் தந்த அல்லு அர்ஜுன் | மார்ச் 15 முதல் புதிய படங்களுக்கு சப் டைட்டில், ஆடியோ விளக்கம் கட்டாயம் | லாரி ஏறிச் சென்று படம் பார்த்தேன்: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி | காதல் பிரிவில் அர்ஜுன் தாஸ்? | வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் |

தமிழ் திரையுலகின் நிரந்தர வசூல் சக்கரவர்த்தியான மக்கள் திலகம் எம் ஜி ஆரும், தனித்துவமிக்க தனது தயாரிப்பு உத்திகளால் பல தரமான திரைப்படங்களைத் தமிழ் சினிமாவிற்கு தந்த சாண்டோ எம் எம் ஏ சின்னப்ப தேவரும் உடன் பிறவா சகோதரர்கள் போலவே கலையுலகில் பயணித்து, காலம் கடந்தும் நிலைத்து நிற்கும் பல கண்ணியமான திரைக்காவியங்களைத் தந்திருக்கின்றனர். தொழில்முறை நட்பு என்பதையும் தாண்டி, இவ்விருவரின் நட்பு கலையுலகில் ஓர் வரலாற்று சிறப்புமிக்க நட்பாகவே இருந்தும் வந்தது. அந்தவகையில் ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த பரஸ்பர மரியாதைதான் அதற்கு காரணம் என்றாலும் அது மிகையன்று. இப்படி இவ்விருவரின் நட்பு துளிர்விட காரணமாக அமைந்த திரைப்படம்தான் “ராஜகுமாரி”.
இயக்குநர் ஏ எஸ் ஏ சாமி இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படமான இத்திரைப்படத்தில், பெரிய நடிகர்களான பி யூ சின்னப்பா, டி ஆர் ராஜகுமாரி ஆகியோரை முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வைத்து பெரும் பொருட் செலவில் படத்தை எடுக்க நினைத்திருந்த தயாரிப்பு தரப்பிடம், “ஸ்ரீமுருகன்” திரைப்படத்தில் சிவன், பார்வதியாக வந்து சிவதாண்டவம் ஆடிய எம் ஜி ஆரையும், உடன் நடனமாடிய கே மாலதி என்ற நடிகையையும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வைக்கலாம் என படத்தின் இயக்குநர் ஏ எஸ் ஏ சாமி கூற, அதன்படியே எம் ஜி ஆர் படத்தின் நாயகன் ஆனார்.
“ராஜகுமாரி” படக் கதையில் ஒரு மகாராணி. அவளுடைய மெய்காப்பாளன் ஒருவனோடு சண்டையிட்டு நாயகன் வெல்வது போல் ஒரு காட்சி. பிரபல பயில்வான் ஒருவரை அந்த மெய்காப்பாளன் வேடத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார் படத்தின் தயாரிப்பாளரான சோமு. அப்போது உங்க யூனிட்டிலேயே அந்த வேடத்துக்கு பொருத்தமான ஒருவர் இருக்கிறாரே, வெளியிலிருந்து ஏன் வேறு ஒருவரை வரவழைக்க வேண்டும்? என எம் ஜி ஆர் தயாரிப்பாளர் சோமுவைப் பார்த்து கேட்க, யாரைச் சொல்கிறீர்கள்? என தயாரிப்பாளர் சோமு எம் ஜி ஆரிடம் கேட்க, சாண்டோ சின்னப்பா இருக்கிறாரே என எம் ஜி ஆர் பதில் தந்தார். நம்ம கம்பெனியில் மாதச் சம்பளம் வாங்கும் எக்ஸ்ட்ரா நடிகர் அவர். வேறு பிரபலமானவரைப் போடலாம் என்றார் சோமு.
சின்னப்பாவின் திறமை எனக்குத் தெரியும். அவர் மிகவும் நன்றாக சண்டை போடுவார். ஒரு வளர்ந்து வரும் நடிகருக்கு உதவியதாக இருக்கும் அவரையே இந்தக் காட்சியில் நடிக்க வைக்கலாமே என எம் ஜி ஆர் மீண்டும் கேட்டுக் கொள்ள, நீங்களே கதாநாயகனாக நடிப்பது இதுதான் முதல் முறை, உங்களோடு சண்டை போடுபவர் பிரபலமானவராக இருந்தால்தானே நன்றாக இருக்கும். கமால்தீன் பயில்வான் என்று ஒருவர் இருக்கிறார், அவரையே நடிக்க வைக்கலாம் என்றார் தயாரிப்பாளர் சோமு.
என்னை மன்னித்துவிடுங்கள்! இந்த சண்டைக் காட்சியில் சின்னப்பாவையே நடிக்க ஏற்பாடு செய்யுங்கள். இல்லையென்றால் இந்த சண்டைக் காட்சியே வேண்டாம் என்றார் எம் ஜி ஆர். இறுதியில் சாண்டோ சின்னப்ப தேவரையே அந்த சண்டைக் காட்சியில் நடிக்க வைக்கலாம் என தயாரிப்புத் தரப்பு முடிவு செய்து, படமாக்கப்பட்டது. அன்று துளிர்விட ஆரம்பித்த எம் ஜி ஆர், சாண்டோ சின்னப்ப தேவரின் நட்பு, பெரிய விருட்சமாகி, பின்னாளில் சாண்டோ சின்னப்ப தேவர் தயாரித்த 16 திரைப்படங்களில் நாயகனாக எம் ஜி ஆர் நடிப்பதற்கு அஸ்திவாரமிட்ட ஒரு திரைப்படமாகவும் அமைந்தது இந்த “ராஜகுமாரி” என்றால் அது மிகையன்று.




