பேஷஸ் ஆப் கர- தனுஷின் கர படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியீடு | வட அமெரிக்காவில் கல்கி 2898 ஏடி படத்தின் வசூல் சாதனையை முறியடித்த துரந்தர் 2 | அண்ணன் வாரிசுகளின் பட பூஜைக்கு வந்து வாழ்த்திய பவன் கல்யாண் | முன்னணி இயக்குனர்களின் வாட்ஸ் ஆப் குழு ‛ரெய்னா' : அர்த்தம் தெரியுமா? | இது எனக்கு புது உலகம் : முதல்முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் சம்யுக்தா | சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்கும் மாளவிகா மனோஜ் | சினிமாக்காரர்களுக்கு ஞாயிறு கட்டாயம் விடுமுறை வேண்டும் : நிவின்பாலி வலியுறுத்தல் | சிபிஐ 6ம் பாகம் வருகிறது : இயக்குனர் மது தகவல் | தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்வாரா வடிவேலு | விரைவில் யூத் பட வெற்றி விழா |

எம்.சுந்தர் இயக்கத்தில் அஜித் தேஜ், ஸ்ரீஸ்வேதா நடிப்பில் உருவாகி உள்ள படம் அந்த 7 நாட்கள். பாக்யராஜ் நடித்த அந்த 7 நாட்கள் படத்துக்கும், இந்த கதைக்கும் சம்பந்தம் இல்லை. ஆனாலும் இந்த படத்தில் பாக்யராஜ் நடித்து இருக்கிறார். நாய் கடியால் பாதிக்கப்பட்ட ஹீரோயின் ஸ்ரீஸ்வதாவுக்கு என்ன நடக்கிறது. ரேபிஸ் நோய் முற்றிய நிலையில் ஹீரோயின் பிழைத்தாரா என்ற ரீதியில் கதை நகர்கிறது. அந்த நோய் பாதிக்கப்பட்டவராக தத்ரூபமாக நடித்து இருக்கிறார் கோவையை சேர்ந்த ஸ்ரீஸ்வேதா.
இது குறித்து அவர் பேசுகையில் 'நடிக்க நல்ல வாய்ப்பு தேடிக்கொண்டு இருந்த நிலையில், இந்த கதை வந்தது. இப்படிப்பட்ட கேரக்டரா என சற்றும் யோசிக்கவில்லை. எனக்கு நடிக்க கிடைத்த நல்ல வாய்ப்பாக கருதி நடித்தேன். அதற்காக, அந்த நோய் பாதித்தவர்களின் வீடியோக்களை பார்த்து, நிறைய கற்றுக்கொண்டேன். அது கொடூரமான பாதிப்பு. அப்படி நடித்தை பார்த்து பலரும் பாராட்டியிருக்கிறார்கள். என்னை பொறுத்தவரையில் தெரு நாய்களை ஒழிக்கபட வேண்டும் என்று சொல்லமாட்டேன். அதன் இனப்பெருக்கத்தை தடை செய்ய வேண்டும் என்பதே என் கருத்து, நானும் ஒரு நாய் வளர்க்கிறேன்' என்றார்.
ஒரு சூப்பர் பவர் மூலமாக, ஒருத்தர் கண்ணை பார்த்தே, அவர்கள் உடனே மரண அடைவார்களா? எப்போது அது நடக்கும் என்ற சக்தி ஹீரோவுக்கு கிடைக்கிறது. ஹீரோயின் கண்ணை பார்க்கும்போது அவர் 7 நாட்கள் மட்டுமே வாழ்வார் என தெரிகிறது. அந்த சமயத்தில் நாய்கடி காரணமாக ஹீரோயினுக்கு ரேபிஸ் பாதிப்பு ஏற்பட, கொடைக்கானலுக்கு போய் அந்த பாதிப்பை குணப்படுத்தினாரா ஹீரோ என்ற ரீதியில் இந்த கதை நகர்கிறதாம்.