என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்க உள்ள 'ஸ்பிரிட்' படத்திலிருந்து ஹிந்தி நடிகை தீபிகா படுகோனே சில மாதங்களுக்கு முன்பு நீக்கப்பட்டார். அதிக சம்பளம், குறைந்த மணி நேர வேலை, நிறைய உதவியாளர்கள் என அவர் 'டிமாண்ட்' அதிகமாக இருந்தது என தகவல் வெளியானது. தற்போது 'கல்கி 2898 ஏடி' படத்தின் இரண்டாம் பாகத்திலிருந்தும் தீபிகா படுகோனே நீக்கப்பட்டுள்ளார்.
தற்போது அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். 'ஸ்பிரிட், கல்கி 2898 எடி 2' ஆகிய இரண்டு படங்களிலிருந்து நீக்கப்பட்டது குறித்து எந்தவிதமான விளக்கத்தையோ பதிலையோ தீபிகா அளிக்கவில்லை. அதேசமயம், ஷாரூக்கான் நடிக்க உள்ள 'கிங்' படத்தில் இணைந்தது குறித்து நேற்று ஒரு பதிவிட்டுள்ளார்.
அதில், “ஓம் ஷாந்தி ஓம்" படப்பிடிப்பின் போது கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு திரைப்படத்தை உருவாக்கும் அனுபவமும், அதை உருவாக்கும் மனிதர்களும், அதன் வெற்றியை விட மிக முக்கியம் என்று அவர் எனக்கு முதல் பாடமாக கற்பித்தார். நான் இதை முழுமையாக ஒப்புக்கொள்கிறேன். இந்த கற்றலை பின்பற்றி ஒவ்வொரு முடிவையும் எடுத்து வந்திருக்கிறேன். அதனால்தான், நாங்கள் ஒன்றாக எங்கள் ஆறாவது படத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம், இல்லையா?,” என ஷாரூக்கானை 'டேக்' செய்து குறிப்பிட்டுள்ளார்.
அவரது இந்தப் பதிவு 'ஸ்பிரிட், கல்கி 2898 ஏடி' குழுவினருக்கான மறைமுகமான பதிலாகவும் பார்க்கப்படுகிறது.