பவழ மல்லி Vs முட்டை கலக்கி - 'யூத்'களுக்குள் கடும் போட்டி | தோழிகளுடன் பால் விளையாடி கையை முறித்துக் கொண்ட யாஷிகா | பேஷஸ் ஆப் கர- தனுஷின் கர படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியீடு | வட அமெரிக்காவில் கல்கி 2898 ஏடி படத்தின் வசூல் சாதனையை முறியடித்த துரந்தர் 2 | அண்ணன் வாரிசுகளின் பட பூஜைக்கு வந்து வாழ்த்திய பவன் கல்யாண் | முன்னணி இயக்குனர்களின் வாட்ஸ் ஆப் குழு ‛ரெய்னா' : அர்த்தம் தெரியுமா? | இது எனக்கு புது உலகம் : முதல்முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் சம்யுக்தா | சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்கும் மாளவிகா மனோஜ் | சினிமாக்காரர்களுக்கு ஞாயிறு கட்டாயம் விடுமுறை வேண்டும் : நிவின்பாலி வலியுறுத்தல் | சிபிஐ 6ம் பாகம் வருகிறது : இயக்குனர் மது தகவல் |

கடந்த 2011ல் மலையாளத்தில் வரலாற்று பின்னணியில் வெளியான படம் உருமி. பிரித்விராஜ், பிரபுதேவா, ஆர்யா, ஜெனிலியா, வித்யாபாலன், நித்யா மேனன் என மிகப்பெரிய நட்சத்திர கூட்டணியுடன் வெளியான இந்த படத்தை ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கியிருந்தார். பிரபல கதாசிரியர் சங்கர் ராமகிருஷ்ணன் கதை எழுதி இருந்தார். இந்த நிலையில் ஏற்கனவே ஹிட்டான படங்களுக்கு இரண்டாம் பாகம் எடுக்கும் டிரெண்ட்டில் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட் என்பது போல உருமி படத்திற்கும் இரண்டாம் உருவாக இருக்கிறது.
படம் வெளியாகி கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது இந்த தகவலை படத்தின் கதாசிரியரான சங்கர் ராமகிருஷ்ணன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இவ்வளவு காலதாமதம் ஏன் என்றால் முதல் பாகத்திற்கு பிறகான கதையை எழுதுவதற்கு 12 வருடங்கள் நேரம் பிடித்தது என்று அவர் கூறியுள்ளார்
மேலும் இதன் கதை மொத்தம் மூன்று பாகங்களாக இருக்கும்.. தற்போது இரண்டாம் பாகத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகள் முடிவடைந்து விட்டன” என்று கூறியுள்ளார். ஆனால் இந்த இரண்டாம் பாகத்தை இயக்கப் போவது யார்? முதல் பாகத்தில் நடித்த பிரித்விராஜ், பிரபுதேவா மற்றும் முதல் பட கதாநாயகிகள் யார் யார் இந்த படத்தில் இடம் பெறப் போகிறார்கள் என்பதெல்லாம் இன்னும் முடிவாகவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.