டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

கடந்த 2011ல் மலையாளத்தில் வரலாற்று பின்னணியில் வெளியான படம் உருமி. பிரித்விராஜ், பிரபுதேவா, ஆர்யா, ஜெனிலியா, வித்யாபாலன், நித்யா மேனன் என மிகப்பெரிய நட்சத்திர கூட்டணியுடன் வெளியான இந்த படத்தை ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கியிருந்தார். பிரபல கதாசிரியர் சங்கர் ராமகிருஷ்ணன் கதை எழுதி இருந்தார். இந்த நிலையில் ஏற்கனவே ஹிட்டான படங்களுக்கு இரண்டாம் பாகம் எடுக்கும் டிரெண்ட்டில் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட் என்பது போல உருமி படத்திற்கும் இரண்டாம் உருவாக இருக்கிறது.
படம் வெளியாகி கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது இந்த தகவலை படத்தின் கதாசிரியரான சங்கர் ராமகிருஷ்ணன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இவ்வளவு காலதாமதம் ஏன் என்றால் முதல் பாகத்திற்கு பிறகான கதையை எழுதுவதற்கு 12 வருடங்கள் நேரம் பிடித்தது என்று அவர் கூறியுள்ளார்
மேலும் இதன் கதை மொத்தம் மூன்று பாகங்களாக இருக்கும்.. தற்போது இரண்டாம் பாகத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகள் முடிவடைந்து விட்டன” என்று கூறியுள்ளார். ஆனால் இந்த இரண்டாம் பாகத்தை இயக்கப் போவது யார்? முதல் பாகத்தில் நடித்த பிரித்விராஜ், பிரபுதேவா மற்றும் முதல் பட கதாநாயகிகள் யார் யார் இந்த படத்தில் இடம் பெறப் போகிறார்கள் என்பதெல்லாம் இன்னும் முடிவாகவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.