இந்த வயதில் இப்படி நடிக்கவே விருப்பம் : ஸ்ரீலீலா | கூலி படம் ரிலீஸ் : பெங்களூர் ராமகிருஷ்ணா ஆசிரமத்துக்கு சென்ற ரஜினி | ஷாரூக், சுனில் ஷெட்டி, அமிதாப், பாபி தியோல் வரிசையில் அமீர்கான் | வளைந்து செல்லாதீர்கள், தைரியமாக இருங்கள் : பெண்களுக்கு சுவாசிகா அறிவுரை | சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி சிறுமிக்கு வன்கொடுமை; மலையாள நடிகை கைது! | 'கைதி 2'க்கு முன்பாக ஹீரோவாக நடிக்கப் போகும் லோகேஷ் கனகராஜ் | ‛பாகுபலி தி எபிக்' ஐமேக்ஸ் வடிவிலும் வெளியாகிறது : படக்குழு அறிவிப்பு | ‛கூலி': 3 மில்லியனை நெருங்கும் பிரிமியர் வசூல் | ரசிகர்களுடன் ‛கூலி' படம் பார்த்த திரைப்பிரபலங்கள் | ‛குட் டே' முதல் ‛ஜேஎஸ்கே' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? |
“அபூர்வ ராகங்கள்” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு வருகை தந்து, ஆர்ப்பாட்டமான வில்லன், அசத்தலான குணச்சித்திரம், அதிரடி காட்டும் ஆக்ஷன் நாயகன் என பன்முக நடிப்பால் உயர்ந்து, இன்றுவரை உச்ச நட்சத்திரம் என்ற அந்தஸ்தை தக்க வைத்து, தமிழ் திரையுலகின் இன்றைய இளம் நாயகர்களின் திரைப்படங்களோடு போட்டியிட்டு, வசூல் சாதனையை அறுவடை செய்து கொண்டிருக்கும் ஓர் “அதிசயப்பிறவி”தான் நடிகர் ரஜினிகாந்த்.
இந்திய மொழிகளில் ஏறக்குறைய 170க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தும், நடித்துக் கொண்டுமிருக்கின்ற இவர், ஓரிரு திரைப்படங்களைத் தயாரித்து, தன்னை ஓர் தயாரிப்பாளராகவும் அடையாளப்படுத்திக் கொண்டிருக்கின்றார். அப்படி அவர் தயாரித்த திரைப்படங்களில் ஒன்றுதான் இந்த “வள்ளி” திரைப்படம்.
1993ம் ஆண்டு தனது “ரஜினி ஆர்ட்ஸ்” என்ற தயாரிப்பு பதாகையின் கீழ் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படத்தில் 'வீரய்யன்' என்ற ஒரு நீட்டிக்கப்பட்ட கவுரவ தோற்றத்தில் இவர் நடித்திருந்ததோடு, இத்திரைப்படத்திற்கான திரைக்கதை வசனத்தையும் அமைத்துத் தந்து, தன்னை ஓர் திரைக்கதாசிரியராகவும் முதன் முதலாக அடையாளப் படுத்திக் கொண்டார் நடிகர் ரஜினிகாந்த். இவருடைய நடிப்புக் கல்லூரித் தோழனும், ஆரம்ப காலங்களில் இவரோடு பல படங்களில் இணைந்து நடித்திருந்த நடிகரும், இவரது “அன்புள்ள ரஜினிகாந்த்” திரைப்படத்தை இயக்கியிருந்த இயக்குநருமான கே நட்ராஜ்தான் இந்த “வள்ளி” திரைப்படத்தையும் இயக்கியிருந்தார்.
நடிகை ப்ரியா ராமன், நடிகர்கள் ஹரிராஜ் மற்றும் சஞ்சய் ஆகியோரை நடிகர்களாக அறிமுகம் செய்து வைத்த இத்திரைப்படம்தான் மேஜிக் நிபுணராக அறியப்பட்டிருந்த மறைந்த அலெக்ஸையும் ஒரு நடிகராக அறிமுப்படுத்தியது. படத்தின் பின்னணி இசையையும், பாடல்களையும் 'இசைஞானி' இளையராஜா வழங்க, படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்திருந்தன. குறிப்பாக “என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்” என்ற பாடல் இன்று வரை இசை விரும்பிகள் பலரது ஹிட் லிஸ்டில் ஒரு தனி இடம் பிடித்த பாடலாக இருக்கின்றது என்பது அனைவரும் அறிந்ததே.
படம் முழுக்க வருவது போல் ஒரு நீட்டிக்கப்பட்ட கவுரவ வேடத்தில் ரஜினி நடித்திருந்தும், 'இசைஞானி' இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்திருந்தும், முதன் முதலாக ரஜினி திரைக்கதை வசனம் எழுதி, தயாரித்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளிவந்த இந்த “வள்ளி”, ஏனோ வெள்ளித் திரையில் மின்னத் தவறி, ரஜினிக்கு வெற்றி என்ற இலக்கை எட்டிப் பிடித்து தராமலேயே பெட்டிக்குள் சுருண்டு கொண்டது.