மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் | தமிழ் படத்தில் மாலத் தீவு நடிகை | பிளாஷ்பேக்: பக்தி படத்தில் விஜயகாந்த் |

இப்போதெல்லாம் பாலிவுட்டில் இருந்து வில்லன் நடிகர்களை தமிழுக்கு அழைத்து வருகிறார்கள். ஆனால் தமிழில் இருந்து பாலிவுட்டுக்கு வில்லன் நடிகராக சென்றவர் தியாகராஜன்.
'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் வில்லனாக நடித்ததை தொடர்ந்து அவர் ஆக்ஷன் படங்களில்தான் நடித்தார். மலையூர் மம்பட்டியான், கொம்பேறி மூக்கன், எரிமலை, ராஜா யுவராஜா, முரட்டுக் கரங்கள் என ஆக்ஷனில் அதகளம் செய்து கொண்டிருந்தார்.
இப்படியான நேரத்தில்தான் மலையாளத்தில் வெளியான 'நியூ டெல்லி' படத்தில் வில்லனாக அறிமுகமானார். உடம்பு முழுவதும் சங்கிலியால் கட்டி திகார் சிறையில் தியாகராஜனை அறிமுகப்படுத்தும் காட்சியிலேயே பொறி பறக்கும். ஹீரோ மம்முட்டிக்கு கூட அப்படியொரு அறிமுகம் இல்லை. 'சேலம் விஷ்ணு' என்ற தமிழ் பேசும் கிரிமினலாக இதில் அவர் நடித்தார்.
படம் பெரிய வெற்றி பெறவே அதனை 'தெலுங்கில் 'அந்திம தீர்ப்பு' என்ற பெயரிலும், ஹிந்தி, கன்னடத்தில் 'நியூ டெல்லி' என்ற பெயரிலும் ரீமேக் செய்தனர். இந்த மூன்று ரீமேக்கிலும் நடித்த ஒரே நடிகர் தியாகராஜன் மட்டுமே. சேலம் விஷ்ணு கேரக்டரில் அவர்தான் நடித்தார்.
அதன்பிறகு 1990ம் ஆண்டு 'சேலம் விஷ்ணு' என்ற பெயரில் அவரே ஒரு படத்தை இயக்கி நடித்தார். இந்த வருடம்தான் அவரது மகன் நடிகர் பிரசாந்த் 'வைகாசி பொறந்தாச்சு' படத்தில் அறிமுகமானார்.