Advertisement

சிறப்புச்செய்திகள்

22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

25 லட்சத்தில் தயாரான 'மாயக்கூத்து'; சம்பளம் குறைவாக வாங்கிய டில்லி கணேஷ்

09 ஜூலை, 2025 - 09:49 IST
எழுத்தின் அளவு:
Maayakoothu,-made-for-25-lakhs-Delhi-Ganesh-received-less-salary
Advertisement


ஏ.ஆர்.ராகவேந்திரா இயக்கத்தில் நாகராஜன் கண்ணன், காயத்ரி, ஐஸ்வர்யா ரகுபதி உட்பட பலர் நடித்த படம் 'மாயக்கூத்து'. ஒரு எழுத்தாளர் தொடர்கதை எழுதுகிறார். அந்த கதையில் வரும் கேரக்டர்கள் திடீரென உயிர் பெறுகின்றன. அந்த எழுத்தாளர் வீடு தேடி வருகின்றன. ''எங்களை சிக்கலில் இருந்து காப்பாற்றுங்கள், எங்கள் கேரக்டரை இப்படி மாற்றியது ஏன்'' என்று சண்டைபோடுகின்றன. ''அது என் கற்பனை, என் இஷ்டபடிதான் எழுதுவேன்'' என எழுத்தாளர் சொல்ல, அந்த கேரக்டர்களால் எழுத்தாளருக்கு பிரச்னைகள் வருகிறது. அந்த கற்பனை கதை கேரக்டர்கள், எழுத்தாளரை துரத்துகின்றன. அடுத்து என்ன நடக்கிறது என்பது மாயக்கூத்து கதை.

இந்த படத்தில் மறைந்த நடிகர் டில்லிகணேஷ் பத்திரிகை எடிட்டர், பப்ளிஷர் ஆக வருகிறார். இது குறித்து இயக்குனர் கூறுகையில் ''நாங்கள் சின்ன டீம். 25 லட்சத்தில் இந்த படத்தை எடுத்தோம். டில்லி கணேசிடம் தயங்கியபடி பேசினோம். அவரோ, சம்பளத்தை மிக குறைவாக வாங்கிக்கொண்டு எங்களுக்காக நடித்து கொடுத்தார். அவரின் நடிப்பு, டெடிகேசன் பார்த்து மிரண்டு விட்டோம். அதேபோல், சண்டக்கோழி உள்ளிட்ட படங்களில் நடித்த நாடக ஆசிரியர், எழுத்தாளரான மு.ராமசாமியும் கவுரவ வேடத்தில், எந்த ஈகோவும் பார்க்காமல் நடித்துக்கொடுத்தார்.

என் அப்பா மலையாளத்தில் 20 படங்களை இயக்கியவர். அவர் படம் தயாரித்ததால் ஒரு கட்டத்தில் கடனாளி ஆனோம். நான் வேலைக்கு போய் கடனை அடைத்து, அப்பா பாணியில் படம் இயக்கியுள்ளேன். இந்த பட திரைக்கதையும், எடிட்டிங்கும் பலரை கவர்ந்துள்ளது. இந்த பட்ஜெட்டில் ஒரு முழு படம், இவ்வளவு நடிகர்களை வைத்து எப்படி சாத்தியம் என பலரும் கேட்கிறார்கள்'' என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அத்துமீறியதாக புகார் கூறிய நடிகை: நேரிலேயே மன்னிப்பு கேட்ட ஷைன் டாம் சாக்கோஅத்துமீறியதாக புகார் கூறிய நடிகை: ... மகள் திருமணத்துக்கு அழைக்காமல் வந்தவர்கள்: தலைவாசல் விஜய் சொன்னது புதுக்கதை மகள் திருமணத்துக்கு அழைக்காமல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in