நிவேதா பெத்துராஜ் திருமணம் ரத்தா...? | மாப்பிள்ளை அவர்தான் ஆனால்.. என்கிற பாணியில் நடிகை வழக்கில் கருத்து தெரிவிக்கும் மலையாள நட்சத்திரங்கள் | பெப்காவில் திலீப்பை சேர்க்க முயற்சி ; ராஜினாமா செய்த பெண் டப்பிங் கலைஞர் | தக்க சமயத்தில் உதவி செய்வதில் சூர்யா எம்ஜிஆர் மாதிரி : விநியோகஸ்தர் சக்திவேலன் | அமெரிக்காவில் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு | பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு |

ஏ.ஆர்.ராகவேந்திரா இயக்கத்தில் நாகராஜன் கண்ணன், காயத்ரி, ஐஸ்வர்யா ரகுபதி உட்பட பலர் நடித்த படம் 'மாயக்கூத்து'. ஒரு எழுத்தாளர் தொடர்கதை எழுதுகிறார். அந்த கதையில் வரும் கேரக்டர்கள் திடீரென உயிர் பெறுகின்றன. அந்த எழுத்தாளர் வீடு தேடி வருகின்றன. ''எங்களை சிக்கலில் இருந்து காப்பாற்றுங்கள், எங்கள் கேரக்டரை இப்படி மாற்றியது ஏன்'' என்று சண்டைபோடுகின்றன. ''அது என் கற்பனை, என் இஷ்டபடிதான் எழுதுவேன்'' என எழுத்தாளர் சொல்ல, அந்த கேரக்டர்களால் எழுத்தாளருக்கு பிரச்னைகள் வருகிறது. அந்த கற்பனை கதை கேரக்டர்கள், எழுத்தாளரை துரத்துகின்றன. அடுத்து என்ன நடக்கிறது என்பது மாயக்கூத்து கதை.
இந்த படத்தில் மறைந்த நடிகர் டில்லிகணேஷ் பத்திரிகை எடிட்டர், பப்ளிஷர் ஆக வருகிறார். இது குறித்து இயக்குனர் கூறுகையில் ''நாங்கள் சின்ன டீம். 25 லட்சத்தில் இந்த படத்தை எடுத்தோம். டில்லி கணேசிடம் தயங்கியபடி பேசினோம். அவரோ, சம்பளத்தை மிக குறைவாக வாங்கிக்கொண்டு எங்களுக்காக நடித்து கொடுத்தார். அவரின் நடிப்பு, டெடிகேசன் பார்த்து மிரண்டு விட்டோம். அதேபோல், சண்டக்கோழி உள்ளிட்ட படங்களில் நடித்த நாடக ஆசிரியர், எழுத்தாளரான மு.ராமசாமியும் கவுரவ வேடத்தில், எந்த ஈகோவும் பார்க்காமல் நடித்துக்கொடுத்தார்.
என் அப்பா மலையாளத்தில் 20 படங்களை இயக்கியவர். அவர் படம் தயாரித்ததால் ஒரு கட்டத்தில் கடனாளி ஆனோம். நான் வேலைக்கு போய் கடனை அடைத்து, அப்பா பாணியில் படம் இயக்கியுள்ளேன். இந்த பட திரைக்கதையும், எடிட்டிங்கும் பலரை கவர்ந்துள்ளது. இந்த பட்ஜெட்டில் ஒரு முழு படம், இவ்வளவு நடிகர்களை வைத்து எப்படி சாத்தியம் என பலரும் கேட்கிறார்கள்'' என்றார்.