நகைச்சுவை வேடத்தில் நடிக்க சிரமப்பட்ட மீனாட்சி சவுத்ரி | இரண்டு நாளில் ரூ.51 கோடி வசூலித்த ‛பராசக்தி' : நாளை நன்றி அறிவிப்பு விழா | ஜனநாயகனுக்கு தொடரும் சிக்கல் : தணிக்கை வாரியம் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் | சிறுவயது பாலியல் துன்புறுத்தல்: 'மரியான்' படப்பிடிப்பில் அசவுகரியம்: பார்வதி 'ஓபன் டாக்' | சுதா கொங்கரா இயக்கத்தில் அடுத்து நடிக்கபோவது சிம்புவா? துருவ் விக்ரமா? | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு பொங்கலுக்கு வெளியாகிறது | அமெரிக்காவில் ஒரு மில்லியன் பிரிமியர் வசூலை தாண்டிய சிரஞ்சீவியின் படம் | பொங்கல் விழாவை கொண்டாட வராத அட்டகத்தி தினேஷ் | வணிக நோக்கில் கமல் பெயர், புகைப்படம் பயன்படுத்த தடை | கதை நாயகியாக நடிக்கும் வடிவுக்கரசி |

பழம்பெரும் பின்னணி பாடகர் யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ். சினிமாவில் பின்னணி பாடகராக அறிமுகமான இவர் தென்னிந்திய மொழிகள் மற்றும் ஹிந்தியில் நூற்றுக்கணக்கான பாடல்களை பாடி உள்ளார். பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
இசைத் துறையில் சாதித்தாலும் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருக்கிறது. பாடகராகவே சில மலையாள படங்களில் தோன்றிய அவர் 'அவன்' என்ற மலையாளப்படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் அந்த படம் வரவேற்பை பெறவில்லை, பிறகு தனுஷ் நடித்த மாரி படத்தில் வில்லனாக நடித்தார். தொடர்ந்து வில்லன் வாய்ப்புகள் வந்ததால் நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்தார். சில ஆண்டுகளுக்கு பிறகு 'படை வீரன்' என்ற படத்தில் நாயகனாக நடித்தார். அந்த படமும் பெரிதாக அவருக்கு உதவவில்லை. அதன் பிறகு 'சாலமன்' என்ற 3டி படத்தில் நடித்தார், பான் இந்தியா படமாக வெளியான இதுவும் சரியாக போகவில்லை.
இந்த நிலையில் 7 ஆண்டுகளுக்கு பின் தற்போது ராம் இயக்கத்தில் 'பறந்து போ' படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். இதில் அவர் நாயகன் மிர்ச்சி சிவாவின் நண்பராக நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த படமாவது விஜய் யேசுதாசுக்கு நல்லதொரு இடத்தை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.




