ரஜிஷா விஜயனுக்கு கை கொடுக்கும் வருடமாக 2025 அமையுமா? | ஜோதிகா பட பெண் இயக்குனரின் படத்திற்கு கேரள அரசு வரி விலக்கு | பஹத் பாசில் பட தேசிய விருது கதாசிரியரின் இயக்கத்தில் நடிக்கும் 'ஜென்டில்மேன் 2' ஹீரோ | 'காந்தாரா-2' படப்பிடிப்பில் மீண்டும் ஒரு மலையாள நடிகர் மரணம் | பஹத் பாசில் - எஸ்ஜே சூர்யா படம் டிராப் ஏன்? மனம் திறந்த இயக்குனர் விபின் தாஸ் | விக்ரம் 63 படம் கைவிடப்பட்டதா? | கூலி, குபேரா படங்கள் குறித்து நாகார்ஜுனா வெளியிட்ட தகவல் | அட்லி படத்தை அடுத்து மேலும் 2 புதிய படங்களில் கமிட்டான அல்லு அர்ஜுன் | தக் லைப் படத்தின் எட்டாவது நாள் வசூல் என்ன | சிம்புவை பற்றி பேச மறுக்கும் நிதி அகர்வால் |
பழம்பெரும் பின்னணி பாடகர் யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ். சினிமாவில் பின்னணி பாடகராக அறிமுகமான இவர் தென்னிந்திய மொழிகள் மற்றும் ஹிந்தியில் நூற்றுக்கணக்கான பாடல்களை பாடி உள்ளார். பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
இசைத் துறையில் சாதித்தாலும் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருக்கிறது. பாடகராகவே சில மலையாள படங்களில் தோன்றிய அவர் 'அவன்' என்ற மலையாளப்படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் அந்த படம் வரவேற்பை பெறவில்லை, பிறகு தனுஷ் நடித்த மாரி படத்தில் வில்லனாக நடித்தார். தொடர்ந்து வில்லன் வாய்ப்புகள் வந்ததால் நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்தார். சில ஆண்டுகளுக்கு பிறகு 'படை வீரன்' என்ற படத்தில் நாயகனாக நடித்தார். அந்த படமும் பெரிதாக அவருக்கு உதவவில்லை. அதன் பிறகு 'சாலமன்' என்ற 3டி படத்தில் நடித்தார், பான் இந்தியா படமாக வெளியான இதுவும் சரியாக போகவில்லை.
இந்த நிலையில் 7 ஆண்டுகளுக்கு பின் தற்போது ராம் இயக்கத்தில் 'பறந்து போ' படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். இதில் அவர் நாயகன் மிர்ச்சி சிவாவின் நண்பராக நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த படமாவது விஜய் யேசுதாசுக்கு நல்லதொரு இடத்தை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.