விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் | நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜரான மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர் | நடிகர் பாலாவின் மனைவிக்கு லாட்டரியில் 25 ஆயிரம் பரிசு |
நடிகர் சந்தானம் நகைச்சுவை நடிகராக உச்சத்தில் வலம் வந்தார். கடந்த பல வருடங்களாக படங்களில் கதாநாயகனாக மட்டும் நடித்து வருகிறார். இவர் நடிகர் சிலம்பரசன் மூலம் சினிமாவில் அறிமுகமானவர்.
தற்போது சந்தானம் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, " ஒருநாள் சிம்பு எனக்கு போன் செய்து, 'படம் ஒண்ணு பண்ணுறேன். அதுல நீங்களும் நடிக்கணும்னு கேட்டார்'. அவர் கேட்டார்னா 'யெஸ்'தான். அதுக்கு மேல ஒண்ணும் சொல்ல முடியாது. அப்படிப்பட்ட இடத்துல அவரை வச்சிருக்கேன். சிம்பு எப்போது கேட்டாலும் 'நோ' சொல்ல மாட்டேன். என்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் இருந்து அவருக்கு ரொம்ப கடமைப்பட்டிருக்கேன். எங்கள் அதிரடியையும் அந்தப் படத்தில் எதிர்பாருங்கள்." என தெரிவித்துள்ளார்.
தக் லைப் படத்திற்கு பின் சிம்புவின் 49வது படத்தை பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணா இயக்குகிறார். இந்த படத்தில் தான் சிம்பு உடன் சந்தானம் நடிக்க போகிறார்.