'அஅஅ' படத்தின் முதல் ஹீரோயினாக மிருணாள் தாகூர் ஒப்பந்தம்? | திருடனாக நடித்தது சுவாரஸ்யமாக இருந்தது : சைப் அலிகான் | சூர்யாவின் 'ரெட்ரோ' விழாவில் விஜய் தேவரகொண்டா | சீமானின் தர்மயுத்தம் : மே மாதம் ரிலீஸ் | சிம்புவுக்கு நோ சொல்லமாட்டேன் : சந்தானம் | லோகேஷின் எல்சியு.,வில் ஒரு பகுதியாக இருந்தால் மகிழ்ச்சியடைவேன் - நடிகர் நானி | விஜய் சேதுபதி, பூரி ஜெகநாத் படத்தின் தலைப்பு இதுவா? | காப்புரிமை வழக்கு : ஏஆர் ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த ஐகோர்ட் உத்தரவு | ஜெயிலர்-2 படப்பிடிப்பு தளத்துக்கு செல்லும் வழியில் ஸ்ரீ மாதேஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்த ரஜினிகாந்த்! | ரெட்ரோ' படத்தைப் பார்த்துவிட்டு சூர்யா கொடுத்த கமெண்ட்! |
நடிகர் சந்தானம் நகைச்சுவை நடிகராக உச்சத்தில் வலம் வந்தார். கடந்த பல வருடங்களாக படங்களில் கதாநாயகனாக மட்டும் நடித்து வருகிறார். இவர் நடிகர் சிலம்பரசன் மூலம் சினிமாவில் அறிமுகமானவர்.
தற்போது சந்தானம் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, " ஒருநாள் சிம்பு எனக்கு போன் செய்து, 'படம் ஒண்ணு பண்ணுறேன். அதுல நீங்களும் நடிக்கணும்னு கேட்டார்'. அவர் கேட்டார்னா 'யெஸ்'தான். அதுக்கு மேல ஒண்ணும் சொல்ல முடியாது. அப்படிப்பட்ட இடத்துல அவரை வச்சிருக்கேன். சிம்பு எப்போது கேட்டாலும் 'நோ' சொல்ல மாட்டேன். என்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் இருந்து அவருக்கு ரொம்ப கடமைப்பட்டிருக்கேன். எங்கள் அதிரடியையும் அந்தப் படத்தில் எதிர்பாருங்கள்." என தெரிவித்துள்ளார்.
தக் லைப் படத்திற்கு பின் சிம்புவின் 49வது படத்தை பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணா இயக்குகிறார். இந்த படத்தில் தான் சிம்பு உடன் சந்தானம் நடிக்க போகிறார்.