ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
நடிகர் சந்தானம் நகைச்சுவை நடிகராக உச்சத்தில் வலம் வந்தார். கடந்த பல வருடங்களாக படங்களில் கதாநாயகனாக மட்டும் நடித்து வருகிறார். இவர் நடிகர் சிலம்பரசன் மூலம் சினிமாவில் அறிமுகமானவர்.
தற்போது சந்தானம் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, " ஒருநாள் சிம்பு எனக்கு போன் செய்து, 'படம் ஒண்ணு பண்ணுறேன். அதுல நீங்களும் நடிக்கணும்னு கேட்டார்'. அவர் கேட்டார்னா 'யெஸ்'தான். அதுக்கு மேல ஒண்ணும் சொல்ல முடியாது. அப்படிப்பட்ட இடத்துல அவரை வச்சிருக்கேன். சிம்பு எப்போது கேட்டாலும் 'நோ' சொல்ல மாட்டேன். என்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் இருந்து அவருக்கு ரொம்ப கடமைப்பட்டிருக்கேன். எங்கள் அதிரடியையும் அந்தப் படத்தில் எதிர்பாருங்கள்." என தெரிவித்துள்ளார்.
தக் லைப் படத்திற்கு பின் சிம்புவின் 49வது படத்தை பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணா இயக்குகிறார். இந்த படத்தில் தான் சிம்பு உடன் சந்தானம் நடிக்க போகிறார்.