நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை |

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஆண்ட்ரியா. கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் மற்ற மதக் கோவில்களுக்கும் சென்று வழிபடுபவர். திருவண்ணாமலை கோவிலுக்குச் சென்று வழிபட்டது குறித்தும் இதற்கு முன்பு பதிவிட்டிருந்தார்.
தற்போது பஞ்சாப் மாநிலத்திற்குப் பயணம் சென்றது குறித்தும் பொற்கோவிலில் தரிசனம் செய்தது குறித்தும் பதிவிட்டுள்ளார்.
“நான் எங்கிருந்து தொடங்குவது, ஒரு குறுகிய முற்றிலும் ஆச்சரியமான பயணம். …
பொற்கோவில் என்ன ஒரு ஈர்ப்பு. அமைதியான அழகான ஒரு சன்னதி. அனைத்து மதங்களை சேர்ந்த மக்களையும் வரவேற்கிறது. சுதந்திரத்தின் போது எல்லைகளில் இருந்த மக்கள் எதிர்கொண்ட மிகப் பெரிய கஷ்டங்களை 'பார்ட்டிஷன் மியுசியம்' உண்மையில் என் கண்களைத் திறந்தது. இது வாகா எல்லைக்கு அழைத்துச் செல்கிறது. ஒரு தனித்தவதமான 'பிஎஸ்எப் சந்திப்புகள்' அரங்கம் என்று மட்டுமே விவரிக்கக் கூடிய இடத்தில் பல இந்தியர்கள் உற்சாகமாக இருப்பதைப் பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
மேலும், சாப்பிடுவதில் நான் பிஸியாக இருந்தேன் என்பதை ஒப்புக் கொள்ள வெட்கப்படவில்லை. லஸ்ஸி, அம்ரிட்சர் குல்சா, சோலே, எனது அபிமான ஜிலேபி.
கடைசியாக ஒன்று... ஷாப்பிங். எல்லா இடங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ள வண்ணமயமான புல்காரி துணிகள் கண்களுக்கு விருந்து. விலைகளுமே உண்மையாக நன்றாகவே இருந்தன. இந்தப் பயணத்திற்குப் பிறகு சீக்கிய சமூகத்தின் மீதான எனது மரியாதையும் அபிமானமும் அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.




