Advertisement

சிறப்புச்செய்திகள்

யாரிடமும் உதவி கேட்காதீங்க : செல்வராகவன் | தாலாட்டுதே வானம்... என தாலாட்டி சென்ற ஜெயச்சந்திரனின் பிறந்தநாள் இன்று! | பாலா விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? லைலா விளக்கம் | போஸ்ட் புரொக்ஷன் ஸ்டூடியோ திறந்தார் ஏ.எல்.விஜய் | பிளாஷ்பேக் : வெளிமாநிலத்தில் வெள்ளி விழா கொண்டாடிய முதல் படம் | பிளாஷ்பேக் : 10 வருட இடைவெளியில் படமாக உருவான ஒரே கதை | நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு | என் மடியில் வளர்ந்த சிறுவன் இன்று பான் இந்திய ஸ்டார் ; நடிகர் பாபு ஆண்டனி பெருமிதம் | ஜூனியர் குஞ்சாக்கோ போபனாக நடித்தவர் அவருக்கே வில்லனாக மாறிய அதிசயம் | நான் அவள் இல்லை ; டீப் பேக் வீடியோ குறித்து வித்யா பாலன் எச்சரிக்கை |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாலா விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? லைலா விளக்கம்

03 மார், 2025 - 02:57 IST
எழுத்தின் அளவு:
Why-did-not-attend-the-Bala-function---Laila-explains

பாலா இயக்கிய 'நந்தா, பிதாமகன்' படங்களில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றவர் லைலா. தற்போது லைலா தமிழில் ரீ என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். விஜய்யின் 'கோட்' படத்தில் நடித்தார். தற்போது அவர் வில்லியாக நடித்துள்ள 'சப்தம்' படம் வெளியாகி உள்ளது.

பாலா இயக்கிய வணங்கான் பட வெளியீட்டிற்காக நடத்தப்பட்ட புரமோசனின் ஒரு பகுதியாக பாலா சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதை விழா நடத்தி கொண்டாடினார்கள். இதில் சூர்யா, சிவகுமார், அருண் விஜய் என அவரோடு பணியாற்றியவர்கள் கலந்து கொண்டார்கள். ஆனால் பாலாவோடு நெருக்கமான நட்பில் இருந்த லைலாவும், பூஜாவும்(நான் கடவுள்) கலந்து கொள்ளவில்லை. பாலாவால் மறுவாழ்வு பெற்ற விக்ரமும் கலந்து கொள்ளவில்லை. விழாவிற்கு பிறகு இதுகுறித்து நடந்த நேர்காணல்களில் பாலா கூறும்போது " அவர்களுக்கு ஆயிரம் வேலையிருந்திருக்கும். யார் வராதது குறித்தும் எனக்கு வருத்தமில்லை" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் லைலா இதுகுறித்து விளக்கம் அளித்திருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது: விழாவில் கலந்து கொள்ள பாலா சார் போனில் அழைப்பு விடுத்திருந்தார். நானும் கலந்து கொள்ள ஆர்வமாகத்தான் இருந்தேன். ஆனால் ஏற்கெனவே ஒப்புக்கொண்ட ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க வேண்டியதாக இருந்தது. இதனால் ஆந்திராவில் இருந்து என்னால் விழாவுக்கு வர முடியவில்லை.

பாலா சாரின் படங்களில் எனக்கு அற்புதமான கேரக்டர்கள் அமைந்தது. 'பிதாமகன்' படம் எனது கேரியரில் மிக முக்கியமான படம். அந்த படத்தில் நான் பேசிய வசனத்தை இப்போதும் ரசிகர்கள் மீம்சாக பயன்படுத்தி வருகிறார்கள். ரசிகர்கள் என்னை மறக்காமல் இருப்பதற்கு காரணமும் பிதாமகன் படம்தான். ரீ என்ட்ரியில் எனக்கு நல்ல கேரக்டர்கள் கிடைத்து வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. 'சப்தம்' படத்திற்காக நான் முதன் முறையாக தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் நானே டப்பிங் பேசி இருக்கிறேன். என்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
போஸ்ட் புரொக்ஷன் ஸ்டூடியோ திறந்தார் ஏ.எல்.விஜய்போஸ்ட் புரொக்ஷன் ஸ்டூடியோ திறந்தார் ... தாலாட்டுதே வானம்... என தாலாட்டி சென்ற ஜெயச்சந்திரனின் பிறந்தநாள் இன்று! தாலாட்டுதே வானம்... என தாலாட்டி சென்ற ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in