Advertisement

சிறப்புச்செய்திகள்

மினிக்கி மினிக்கி…. ஜிவி பிரகாஷின் அடுத்த 100 மில்லியன் | கிராமி விருது வென்ற தமிழ்ப்பெண் சந்திரிகா : சென்னை வானொலியில் இசை கேட்டு வளர்ந்ததாக பெருமிதம் | நியூயார்க் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 'கத்தி' பட வில்லன் நீல் நிதின் முகேஷ்! | நயன்தாராவுக்கு இரட்டை பெண் குழந்தை இருந்தால் எப்படியிருக்கும்?: வைரலாகும் ஏஐ போட்டோ | கடவுள் பூமிக்கு வந்தால்… : சிம்புவின் 51வது பட அறிவிப்பு வெளியானது | லக்கி பாஸ்கரை அடுத்து 4 மொழிகளில் துல்கர் சல்மான் நடிக்கும் படம் | தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம்: பார்வதி நாயருக்கு விரைவில் 'டும்.. டும்.. டும்..' | பிரியங்கா சோப்ரா இல்லாமல் மகேஷ் பாபு படத்தின் படப்பிடிப்பை துவங்கிய ராஜமவுலி | கண்ணப்பா படத்தில் ருத்ராவாக பிரபாஸ் | சிவகார்த்திகேயனை இயக்கும் அஹமது |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கிராமி விருது வென்ற தமிழ்ப்பெண் சந்திரிகா : சென்னை வானொலியில் இசை கேட்டு வளர்ந்ததாக பெருமிதம்

04 பிப், 2025 - 10:19 IST
எழுத்தின் அளவு:
Tamil-woman-Chandrika-won-Grammy-Award

சென்னையில் பிறந்த சந்திரிகா டாண்டன் கிராமி விருது வென்று சாதனை படைத்துள்ளார். இவர் பெப்சி நிறுவன முன்னாள் தலைவர் இந்திரா நூயியின் சகோதரி.

சர்வதேச அளவில் இசைத் துறையில் மிகப்பெரிய கவுரமாக கருதப்படுவது கிராமி விருது. பாப், ராக், நாட்டுப்புற இசை, ஜாஸ் உட்பட பல்வேறு பிரிவுகளுக்கு விருது அளிக்கப்படுகிறது. அந்த வகையில், 67வது கிராமி விருது விழா மற்றும் கலிபோர்னியா காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி லாஸ் ஏஞ்சல்சில் நடந்தது.

இதில், அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி பாடகியான சந்திரிகா டாண்டன் விருது வென்றுள்ளார். அவரது, 'திரிவேணி' இசை ஆல்பம், 'சிறந்த தற்கால ஆல்பம்' என்ற பிரிவில் கிராமி விருதை வென்றுள்ளது. சென்னையை பூர்வீகமாகக் கொண்டவர் தான் சந்திரிகா.

யார் இந்த சந்திரிகா டாண்டன்?

* சென்னையில் சந்திரிகா கிருஷ்ணமூர்த்தி டாண்டன் பிறந்தார். இவருக்கு வயது 71.

* இவர் 1954ம் ஆண்டு பிறந்தார். சென்னை கிறிஸ்டியன் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தார்.

* இவர் பெப்சிகோ நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி இந்திரா நூயியின் மூத்த சகோதரி ஆவார்.

* பட்டப் படிப்பிற்கு பின் அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்த டாண்டன் தொழில்துறையில் சிறந்து விளங்கினார்.

* கடந்த 2005ம் ஆண்டில் Soul chants music என்ற இசை லேபிள் நிறுவனத்தை துவங்கினார்.

* அமெரிக்காவின் kennedy center, lincoln center, times square ஆகிய இடங்களில் பாடல்கள் பாடி வரவேற்பைப் பெற்றுள்ளார்.

* நியூயார்க், ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் பட்ட மேற்படிப்பு முடித்துள்ள சந்திரிகா டாண்டன் அமெரிக்கா கலை மற்றும் அறிவியல் அகாடமியில் உறுப்பினராக உள்ளார்.

கிராமி விருது பெற்றது குறித்து, சந்திரிகா டாண்டன் கூறியதாவது : இசை என்பது காதல், ஒளி, சிரிப்பு. நாம் அனைவரும் அன்பு, ஒளி மற்றும் சிரிப்பால் சூழப்பட்டிருப்போம். நான் இசை மூலம் என் திறமையை கண்டுபிடித்தேன், என்றார்.

முதலில் வங்கி பணியில் சேர்ந்த அவர், பின்னர் மெக்கன்சி நிறுவனத்தில் பங்குதாரராக சேர்ந்தார். தொடர்ந்து தனது சொந்த நிதி ஆலோசனை நிறுவனத்தை துவக்கினார். கொடையாளராக செயல்பட்டு வரும் அவர், இப்போது கிராமி விருது வென்று சாதனை படைத்துள்ளார்.

தான் எப்போது இசையை கேட்கத் தொடங்கினேன் என்பது பற்றி சந்திரிகா சுவாரசியமான தகவலை வெளியிட்டுள்ளார். 'சென்னையில் வசித்தபோது ரேடியோவில் ஒலிபரப்பாகும் பாடல்கள் தான் நான் கேட்ட முதல் இசை.

அப்போது சென்னையில் இரண்டு வானொலி நிலையங்கள் இருந்தன. அவற்றின் மூலமாகவே இசை கேட்டு பழகினேன். என் தாயார் காலை முதல் இரவு வரை தொடர்ந்து வானொலி கேட்டுக் கொண்டே இருப்பார். அப்படித்தான் இசை எனக்கு அறிமுகம் ஆனது' என்று சந்திரிகா தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நியூயார்க் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 'கத்தி' பட வில்லன் நீல் நிதின் முகேஷ்!நியூயார்க் விமான நிலையத்தில் கைது ... மினிக்கி மினிக்கி…. ஜிவி பிரகாஷின் அடுத்த 100 மில்லியன் மினிக்கி மினிக்கி…. ஜிவி பிரகாஷின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in