நடிகை அஞ்சலி தமிழ், தெலுங்கு மொழிகளில் ஒரு காலகட்டத்தில் அதிகளவில் படங்களில் நடித்து வந்தார். கடந்த சில வருடங்களாக பெரிதளவில் படங்களில் நடிப்பது இல்லை.
தற்போது ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள 'கேம் சேஞ்ஜர்' படத்தில் அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதன் புரமோஷன் நிகழ்ச்சியில் அஞ்சலி கூறியதாவது, "கேம் சேஞ்ஜர் படத்தில் பார்வதி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். என் அம்மாவின் பெயரும் பார்வதி தான். ஷங்கர் என்னிடம் கதை சொல்லும் போது அந்த கதாபாத்திரத்தின் பெயரைச் சொன்னதும் என் அம்மாவை நினைவுப்படுத்தியது. கேம் சேஞ்ஜர் என் சினிமா வாழ்க்கையில் பெரிய படமாக இருக்கும்" என தெரிவித்துள்ளார்.