விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் |
சமீபத்தில் தமிழில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து திரைக்கு வந்த 'அமரன்' படம் உலகளவில் சுமார் ரூ. 300 கோடிக்கு மேல் வசூலித்து சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையில் உச்சமாக அமைந்துள்ளது.
இந்த நிலையில் இன்று திடீரென சிவகார்த்திகேயன் அவரது மனைவி ஆர்த்தி உடன் மதுரையில் உள்ள அழகர்கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் மேற்கொண்டார். அழகர்கோயிலில் காவல் தெய்வமாக விளங்கும் பதினெட்டாம்படி கருப்பணசாமி சன்னதி சென்று அங்கும் தரிசனம் செய்தார். அப்போது கருப்பணசாமி கோயிலுக்கு காணிக்கை செலுத்தும் விதமாக அரிவாள் வழங்கினார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.