தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் முதல் முறையாக தமிழில் ஒரு படத்தை இயக்குகிறார். இதனை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக பல மாதங்களுக்கு முன் அறிவித்தனர். ஆனால் அதன் பிறகு இப்படம் குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த படத்தில் நடிப்பது தொடர்பாக சில நடிகர்களின் பெயர்கள் வெளியாகின. இறுதியாக சந்தீப் கிஷன் நடிப்பதாக தகவல் வந்தது.
இந்நிலையில் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்க சந்தீப் கிஷன் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக இன்று(நவ., 29) அறிவித்துள்ளனர். இந்த படத்திற்கு தமன் இசையமைக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளதாக மோசன் போஸ்டருடன் அறிவித்துள்ளனர்.
'நீங்கள் இழந்ததை அதே இடத்தில் தேடுங்கள்' என்ற மையக்கருவை சுற்றிதான் இந்த படம் நகரும். பார்வையாளர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் புதிய அனுபவத்தைக் கொடுக்கும். ஜனவரி 2025-ல் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம் என்கிறார் லைகா நிறுவனத்தின் ஜிகேஎம் தமிழ் குமரன்.