ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் முதல் முறையாக தமிழில் ஒரு படத்தை இயக்குகிறார். இதனை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக பல மாதங்களுக்கு முன் அறிவித்தனர். ஆனால் அதன் பிறகு இப்படம் குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த படத்தில் நடிப்பது தொடர்பாக சில நடிகர்களின் பெயர்கள் வெளியாகின. இறுதியாக சந்தீப் கிஷன் நடிப்பதாக தகவல் வந்தது.
இந்நிலையில் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்க சந்தீப் கிஷன் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக இன்று(நவ., 29) அறிவித்துள்ளனர். இந்த படத்திற்கு தமன் இசையமைக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளதாக மோசன் போஸ்டருடன் அறிவித்துள்ளனர்.
'நீங்கள் இழந்ததை அதே இடத்தில் தேடுங்கள்' என்ற மையக்கருவை சுற்றிதான் இந்த படம் நகரும். பார்வையாளர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் புதிய அனுபவத்தைக் கொடுக்கும். ஜனவரி 2025-ல் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம் என்கிறார் லைகா நிறுவனத்தின் ஜிகேஎம் தமிழ் குமரன்.