தணிக்கை நடைமுறையில் உள்ள சிக்கல் : 'பராசக்தி' வெளியீடும் தள்ளிப் போகலாம் | பெண் இயக்குனர் இயக்கிய படமா? ராம்கோபால் வர்மா ஆச்சரியம் | ஜனநாயகன் ரிலீஸ் சிக்கல் : விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த திரைப்பிரபலங்கள் | தெலுங்கில் மாஸ் காட்டிய 'அகண்டா-2' முதல்... பீல் குட் மூவி 'அங்கம்மாள்' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | 'ஜனநாயகன்' தள்ளிப்போனதால் நிகிலா விமல் படத்துக்கு அடித்த ஜாக்பாட் | 'பராசக்தி' படத்தில் பசில் ஜோசப் ; உறுதி செய்த சிவகார்த்திகேயன் | சிறப்பு பாடல்களுக்கு இனிமேல் நடனமாட மாட்டேன்!- ஸ்ரீ லீலா வெளியிட்ட தகவல் | 'பராசக்தி'யில் யுவன் சங்கர் ராஜா பாடிய 'சேனைக் கூட்டம்' பாடல் வெளியானது! | கார்த்தியின் 'வா வாத்தியார்' பொங்கலுக்கு திரைக்கு வருகிறதா? | 'தக் லைப்' விவகாரம் : அப்போது குரல் கொடுக்காத விஜய்.. |

அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியான 'முகதார் கா சிக்கந்தர்' படம் தமிழில் 'அமரகாவியம்' என்ற பெயரில் ரீமேக் ஆனது. இதில் அமிதாப்பச்சன் நடித்த கேரக்டரில் சிவாஜி நடித்தார். இந்தி படத்தில் அமிதாப் கேரக்டருக்கு நிகராக அதில் அம்ஜத்கான் நடித்த நெகட்டிவ் கேரக்டரும் பேசப்பட்டது.
இதனால் படம் ரீமேக் ஆகும்போது அப்போது சினிமாவில் நடிக்க தயாராகி கொண்டிருந்த சிவாஜி மகன் பிரபுவை இந்த படத்தின் மூலம் அறிமுகப்படுத்தலாம், அம்ஜத்கான் நடித்த கேரக்டரில் பிரபுவை நடிக்க வைக்கலாம், என்ற கருத்தை படத்தின் தயாரிப்பாளரும், இசை அமைப்பாளருமான எம்.எஸ்.விஸ்வநாதன் கூறினார். இந்த கருத்தை சிவாஜியிடம் சொன்னபோது “அதை அவன்கிட்டேயே கேளுங்க, நான் யார்கூட வேணாலும் நடிப்பேன்” என்று கூறிவிட்டார்.
பின்பு பிரபுவிடம் சொன்ன பிறகு ஹிந்திப் படத்தை பார்த்த பிறகு அதில் நடிக்க மறுத்து விட்டார். முதல் படத்திலேயே அப்பாவுடன் சண்டை போடுகிற, ரத்தகளறியாக இருக்கிற கேரக்டர் வேண்டாம் என்று கூறிவிட்டார். அதன் பிறகு அந்த கேரக்டரில் ஜெய் கணேஷ் நடித்தார்.
இந்த படத்தில் சிவாஜியுடன் ஸ்ரீப்ரியா, மாதவி, நாகேஷ், மேஜர் சுந்தர்ராஜன், சுகுமாரி, உள்ளிட்ட பலர் நடித்தனர். அமிர்தம் இயக்கி இருந்தார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.