உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி | மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர் | ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன் | இப்ப ஹீரோ, அடுத்து இயக்கம் : புதுமாப்பிள்ளை அபிஷன் ஜீவிந்த் பேட்டி | இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ் | தன் இறப்புக்கு லீவு வாங்கிக் கொடுத்த அப்பா : மேடையில் கண் கலங்கிய ஆனந்தராஜ் | அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் | ஜெயிலர் 2 : சிறப்புத் தோற்றத்தில் பகத் பாசில் |

அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியான 'முகதார் கா சிக்கந்தர்' படம் தமிழில் 'அமரகாவியம்' என்ற பெயரில் ரீமேக் ஆனது. இதில் அமிதாப்பச்சன் நடித்த கேரக்டரில் சிவாஜி நடித்தார். இந்தி படத்தில் அமிதாப் கேரக்டருக்கு நிகராக அதில் அம்ஜத்கான் நடித்த நெகட்டிவ் கேரக்டரும் பேசப்பட்டது.
இதனால் படம் ரீமேக் ஆகும்போது அப்போது சினிமாவில் நடிக்க தயாராகி கொண்டிருந்த சிவாஜி மகன் பிரபுவை இந்த படத்தின் மூலம் அறிமுகப்படுத்தலாம், அம்ஜத்கான் நடித்த கேரக்டரில் பிரபுவை நடிக்க வைக்கலாம், என்ற கருத்தை படத்தின் தயாரிப்பாளரும், இசை அமைப்பாளருமான எம்.எஸ்.விஸ்வநாதன் கூறினார். இந்த கருத்தை சிவாஜியிடம் சொன்னபோது “அதை அவன்கிட்டேயே கேளுங்க, நான் யார்கூட வேணாலும் நடிப்பேன்” என்று கூறிவிட்டார்.
பின்பு பிரபுவிடம் சொன்ன பிறகு ஹிந்திப் படத்தை பார்த்த பிறகு அதில் நடிக்க மறுத்து விட்டார். முதல் படத்திலேயே அப்பாவுடன் சண்டை போடுகிற, ரத்தகளறியாக இருக்கிற கேரக்டர் வேண்டாம் என்று கூறிவிட்டார். அதன் பிறகு அந்த கேரக்டரில் ஜெய் கணேஷ் நடித்தார்.
இந்த படத்தில் சிவாஜியுடன் ஸ்ரீப்ரியா, மாதவி, நாகேஷ், மேஜர் சுந்தர்ராஜன், சுகுமாரி, உள்ளிட்ட பலர் நடித்தனர். அமிர்தம் இயக்கி இருந்தார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.