நாளை ஜனநாயகன் படம் ரிலீஸ் இல்லை! | ஜன. 30ல் திரைக்கு வரும் ‛தலைவர் தம்பி தலைமையில்' | 'பாபு, ஏய்' படங்களின் 'உல்டா' தான் 'பகவந்த் கேசரி', அதன் ரீமேக் தான் 'ஜனநாயகன்' | பிப்ரவரி முதல் கல்கி 2 படப்பிடிப்பில் கமல்ஹாசன் | திரிஷ்யம் 3 ரிலீஸ் எப்போது : இயக்குனர் தகவல் | ரன்வீர் சிங் ஜோடியாக பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | சமந்தாவின் மா இண்டி பங்காரம் படத்தின் டீசர் ஜனவரி 9ல் ரிலீஸ் | ரேஸின் போது அஜித்தை சந்தித்தது ஏன் : ஸ்ரீலீலா பதில் | ரிலீஸ் அறிவிக்கப்பட்ட தேதியில் தீர்ப்பு; 'ஜனநாயகன்' ஜன.9ல் வெளியாகுமா? | சீமான் இயக்கத்தில் மாதவன் நடித்த தம்பி ரீ ரிலீஸ் ஆகிறது |

தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி போன்ற படங்களில் நடித்து வரும் அஜித் குமார், அடுத்தபடியாக கேஜிஎப் படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கும் படத்தில் நடிக்கப் போவதாக கடந்த சில தினங்களாக ஒரு செய்தி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் அஜித்தின் மேனேஜரான சுரேஷ் சந்திரா அது குறித்து ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ‛அஜித் - பிரசாந்த் நீல் இருவரும் சந்தித்தது உண்மைதான். ஆனால் அது மரியாதை நிமித்தமான சந்திப்பு. அந்த சந்திப்பின்போது இருவரும் ஒரே படத்தில் இணைந்து பணியாற்றுவது குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை' என்று தெரிவித்திருக்கிறார். இருப்பினும் ‛எதிர்காலத்தில் அவர்கள் இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய ஆசை' என கூறியிருக்கிறார். இதன் மூலம் பிரசாந்த் நீல் இயக்கத்தில் அஜித் நடிப்பது உறுதியாகவில்லை என்பது தெரியவந்துள்ளது.