ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் | உங்களை ஏமாற்ற மாட்டேன் லாலேட்டா : மோகன்லால் மகளை அறிமுகப்படுத்தும் இயக்குனர் உறுதி | சினிமாவில் ஒரு வட்டத்துக்குள் சிக்க விரும்பவில்லை: கிரேஸ் ஆண்டனி | சுரேஷ் கோபி பட சென்சார் விவகாரம் : சனிக்கிழமை படம் பார்க்கும் நீதிபதி |
தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி போன்ற படங்களில் நடித்து வரும் அஜித் குமார், அடுத்தபடியாக கேஜிஎப் படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கும் படத்தில் நடிக்கப் போவதாக கடந்த சில தினங்களாக ஒரு செய்தி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் அஜித்தின் மேனேஜரான சுரேஷ் சந்திரா அது குறித்து ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ‛அஜித் - பிரசாந்த் நீல் இருவரும் சந்தித்தது உண்மைதான். ஆனால் அது மரியாதை நிமித்தமான சந்திப்பு. அந்த சந்திப்பின்போது இருவரும் ஒரே படத்தில் இணைந்து பணியாற்றுவது குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை' என்று தெரிவித்திருக்கிறார். இருப்பினும் ‛எதிர்காலத்தில் அவர்கள் இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய ஆசை' என கூறியிருக்கிறார். இதன் மூலம் பிரசாந்த் நீல் இயக்கத்தில் அஜித் நடிப்பது உறுதியாகவில்லை என்பது தெரியவந்துள்ளது.