'காந்தி டாக்ஸ்' முதல் 'வித் லவ்' வரை... இந்த வார ஓடிடி வெளியீடுகள்.. | வருங்கால கணவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்! மீனாட்சி சவுத்ரி வெளியிட்ட தகவல் | வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: 'துரந்தர்- 2' படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது | ஜான்வி கபூரின் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட பெத்தி பட போஸ்டர்! | யோகி பாபுவின் 'கெணத்த காணோம்' படத்தின் டிரைலர் வெளியானது! | ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' |

இப்போது இசை அமைப்பாளர்கள் நடிகராகும் காலம். ஆனால் 1980களிலேயே இசை அமைப்பாளராக இருந்து நடிகர் ஆனவர் (சங்கர்) - கணேஷ். 'ஒத்தயடி பாதையிலே' என்ற படத்தில் நாயகனாக அறிமுமானார். இந்த படத்தை ஏ.எஸ்.பிரகாசம் இயக்கினார். சண்டை இயக்குனர் ஜூடோ ரத்னம் தயாரித்தார். பவுர்ணமி என்ற புதுமுகம் அறிமுகமானார். இவர்களுடன் ஜக்கு, மாயா, நளினி, ஐசரி வேலன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ஹிட்டானது. குறிப்பாக “செப்புகுடம் தூக்கிட்டு...” இன்றளவும் ரசிக்கப்படுகிற கிராமிய பாடலாக இருக்கிறது. ஆனால் இந்த படம் வெற்றி பெறவில்லை. இந்த காலகட்டத்தில் வெளிவந்த 'ரோசாப்பூ ரவிக்கைகாரி' படத்தின் சாயலில் இந்த படம் வந்ததே தோல்விக்கு காரணமாக சொல்லப்பட்டது. படம் தோல்வி அடைந்ததால் கணேஷ் அதன்பிறகு சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். பின்னர் அதையும் கைவிட்டார். படத்தில் அறிமுகமான ஹீரோயின் பவுர்ணமி அதன்பிறகு வேறு படங்களிலும் நடிக்கவில்லை.




