கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
இப்போது இசை அமைப்பாளர்கள் நடிகராகும் காலம். ஆனால் 1980களிலேயே இசை அமைப்பாளராக இருந்து நடிகர் ஆனவர் (சங்கர்) - கணேஷ். 'ஒத்தயடி பாதையிலே' என்ற படத்தில் நாயகனாக அறிமுமானார். இந்த படத்தை ஏ.எஸ்.பிரகாசம் இயக்கினார். சண்டை இயக்குனர் ஜூடோ ரத்னம் தயாரித்தார். பவுர்ணமி என்ற புதுமுகம் அறிமுகமானார். இவர்களுடன் ஜக்கு, மாயா, நளினி, ஐசரி வேலன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ஹிட்டானது. குறிப்பாக “செப்புகுடம் தூக்கிட்டு...” இன்றளவும் ரசிக்கப்படுகிற கிராமிய பாடலாக இருக்கிறது. ஆனால் இந்த படம் வெற்றி பெறவில்லை. இந்த காலகட்டத்தில் வெளிவந்த 'ரோசாப்பூ ரவிக்கைகாரி' படத்தின் சாயலில் இந்த படம் வந்ததே தோல்விக்கு காரணமாக சொல்லப்பட்டது. படம் தோல்வி அடைந்ததால் கணேஷ் அதன்பிறகு சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். பின்னர் அதையும் கைவிட்டார். படத்தில் அறிமுகமான ஹீரோயின் பவுர்ணமி அதன்பிறகு வேறு படங்களிலும் நடிக்கவில்லை.