சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
இப்போது இசை அமைப்பாளர்கள் நடிகராகும் காலம். ஆனால் 1980களிலேயே இசை அமைப்பாளராக இருந்து நடிகர் ஆனவர் (சங்கர்) - கணேஷ். 'ஒத்தயடி பாதையிலே' என்ற படத்தில் நாயகனாக அறிமுமானார். இந்த படத்தை ஏ.எஸ்.பிரகாசம் இயக்கினார். சண்டை இயக்குனர் ஜூடோ ரத்னம் தயாரித்தார். பவுர்ணமி என்ற புதுமுகம் அறிமுகமானார். இவர்களுடன் ஜக்கு, மாயா, நளினி, ஐசரி வேலன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ஹிட்டானது. குறிப்பாக “செப்புகுடம் தூக்கிட்டு...” இன்றளவும் ரசிக்கப்படுகிற கிராமிய பாடலாக இருக்கிறது. ஆனால் இந்த படம் வெற்றி பெறவில்லை. இந்த காலகட்டத்தில் வெளிவந்த 'ரோசாப்பூ ரவிக்கைகாரி' படத்தின் சாயலில் இந்த படம் வந்ததே தோல்விக்கு காரணமாக சொல்லப்பட்டது. படம் தோல்வி அடைந்ததால் கணேஷ் அதன்பிறகு சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். பின்னர் அதையும் கைவிட்டார். படத்தில் அறிமுகமான ஹீரோயின் பவுர்ணமி அதன்பிறகு வேறு படங்களிலும் நடிக்கவில்லை.