டிவி ஒளிபரப்பில் சாதனை படைத்த 'புஷ்பா 2' | முதல் முறையாக இரட்டை வேடத்தில் அதர்வா | பிளாஷ்பேக்: அறச்சொல் பாடி, தோல்வியை சந்தித்த எம் ஜி ஆரின் “தலைவன்” | தமிழில் மிகவும் சுமாரான முன்பதிவில் 'குபேரா' | 'குட் வொய்ப்' வெப் தொடரில் வலுவான நாயகி கதாபாத்திரம்: இயக்குனர் ரேவதி | பிளாஷ்பேக்: தமிழில் வந்த முதல் உளவியல் திரைப்படம் | சிவகார்த்திகேயன் 24வது படம் : இயக்குனர் யார்? | பிக்பாக்கெட் குற்றங்களை விரிவாக பேசும் படம் | தமிழில் வெளியாகும் ஹாலிவுட் அனிமேஷன் படம் | திருமண ஆசை காட்டி மோசடி : சின்னத்திரை நடிகை ரிகானா மீது போலீசில் புகார் |
காமெடி மற்றும் குணசித்ர நடிகராக இருந்த காளி வெங்கட் அவ்வப்போது கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். தற்போது அவர் கதை நாயகனாக நடிக்கும் படம் 'தோனிமா'. இதனை 'பக்ரீத்' படத்தை இயக்கிய ஜெகதீசன் சுப்பு இயக்குகிறார். காளி வெங்கட் ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார். பாலாவின் 'வணங்கான்' படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் ரோஷிணி பிரகாஷ் தான் இவர். இதில் அவர் 12 வயது சிறுவனுக்கு அம்மாவாக நடிக்கிறார். காளி வெங்கட், ரோஷிணி பிரகாஷ் தவிர விஷ்வ ராஜ், விவேக் பிரசன்னா, பி.எல்.தேனப்பன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
படம் குறித்து இயக்குனர் ஜெகதீசன் சுப்பு கூறியதாவது: 'பக்ரீத்' படத்தில் ஒரு குடும்பம், ஒரு ஒட்டகம் சுற்றி நடக்கும் கதையை சொன்னேன். இதில் ஒரு குடும்பம், ஒரு நாய்க்குட்டியை சுற்றி நடக்கும் கதையை சொல்கிறேன். விலங்குகள் மீது எனக்கு தனிப்பிரியம் உண்டு. அதனால்தான் விலங்கை மையப்படுத்தி உணர்வுபூர்வமான கதையை சொல்கிறேன்.
காளி வெங்கட், ரோஷிணி தம்பதியின் மகனாக விஷ்வ ராஜ் நடித்திருக்கிறார். மகனுக்கு காது ஆபேரஷன் செய்வதற்காக அல்லல்படும் அம்மாவாக ரோஷிணி நடித்துள்ளார். இவர்களுக்கு ஒரு நாய்க்குட்டி கிடைக்கிறது. அது பெண் நாய்க்குட்டி என்பதால் அதற்கு 'தோனிமா' என காளி வெங்கட் பெயர் வைக்கிறார். விலங்கு மீதான பாசத்தையும் மனிதர்களின் உணர்வுகளையும் சொல்லும் படமாக இது இருக்கும் என்கிறார்.