பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

மும்பை: மஹாராஷ்டிராவின் மும்பையில் பாலிவுட் நடிகை ரவீணா டாண்டன்(49) கடந்த 1ம் தேதி நள்ளிரவு பார்ட்டி ஒன்றில் பங்கேற்று விட்டு காரில் வந்து கொண்டிருந்தார். மும்பையின் கார்ட்டர் சாலை பகுதி அருகே கார் வந்த போது, சாலையை கடக்க முயன்ற மூன்று பெண்கள் மீது மோதியது. இதில், அந்தப் பெண்கள் காயம் அடைந்தனர்.
காரை ஓட்டிய டிரைவர் காரில் இருந்து இறங்கி வந்து, சாலையை கடக்க முயன்ற பெண்களுடன் தகராறு செய்தார். மேலும் அவர், அவர்களை பிடித்து கீழே தள்ளியதாகக் கூறப்படுகிறது.
காரில் இருந்து இறங்கிய நடிகை ரவீணா டாண்டனும், டிரைவருடன் சேர்ந்து, சாலையை கடக்க முயன்ற பெண்களை தாக்கியதாகக் கூறப்படுகிறது. அப்போது அவர் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அப்பகுதியில் உள்ளூர் மக்கள் திரண்டனர். இந்த சம்பவத்தை, அவர்களில் சிலர் மொபைல் போனில் வீடியோ எடுத்தனர். கோபத்தில், உள்ளூர் மக்கள் சிலர் நடிகை ரவீணாவை தாக்கினர்.
உடனே, 'தயவு செய்து என்னை அடிக்காதீர்கள்; என்னை தள்ளாதீர்கள்' என, அவர் கெஞ்சினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.