டப்பிங் படங்களை கண்டு கொள்ளாத தமிழ் ரசிகர்கள் | ஆயிரத்தில் ஒருத்தி சாரா அர்ஜுன் | சரிதாவை பார்க்க சுந்தர்.சி மகளின் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த சுசித்ரா மோகன்லால் | மோகன்லால் 366வது படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு | “போரை விரும்பாதவர்களுக்கான படம்” : நீளிரா படத்துக்கு சூர்யா பாராட்டு | இரண்டாவது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட சோனம் கபூர் | பேஷன் ஐகானாக உருவெடுக்கும் ஸ்ரீலீலா | உலக அரங்கில் மீண்டும் ராஷ்மிகா | அரசியல் குறித்த கேள்விக்கு ரஜினி கொடுத்த பதில் | ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரும் மிஸ்டர்.எக்ஸ் படம் |

மும்பை: மஹாராஷ்டிராவின் மும்பையில் பாலிவுட் நடிகை ரவீணா டாண்டன்(49) கடந்த 1ம் தேதி நள்ளிரவு பார்ட்டி ஒன்றில் பங்கேற்று விட்டு காரில் வந்து கொண்டிருந்தார். மும்பையின் கார்ட்டர் சாலை பகுதி அருகே கார் வந்த போது, சாலையை கடக்க முயன்ற மூன்று பெண்கள் மீது மோதியது. இதில், அந்தப் பெண்கள் காயம் அடைந்தனர்.
காரை ஓட்டிய டிரைவர் காரில் இருந்து இறங்கி வந்து, சாலையை கடக்க முயன்ற பெண்களுடன் தகராறு செய்தார். மேலும் அவர், அவர்களை பிடித்து கீழே தள்ளியதாகக் கூறப்படுகிறது.
காரில் இருந்து இறங்கிய நடிகை ரவீணா டாண்டனும், டிரைவருடன் சேர்ந்து, சாலையை கடக்க முயன்ற பெண்களை தாக்கியதாகக் கூறப்படுகிறது. அப்போது அவர் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அப்பகுதியில் உள்ளூர் மக்கள் திரண்டனர். இந்த சம்பவத்தை, அவர்களில் சிலர் மொபைல் போனில் வீடியோ எடுத்தனர். கோபத்தில், உள்ளூர் மக்கள் சிலர் நடிகை ரவீணாவை தாக்கினர்.
உடனே, 'தயவு செய்து என்னை அடிக்காதீர்கள்; என்னை தள்ளாதீர்கள்' என, அவர் கெஞ்சினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.