'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு! | சோசியல் மீடியாவில் விமர்சித்த ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த கமெண்ட்! | வேறு வழியின்றி விஜய் படத்தை இயக்கினேன் ; தங்கர் பச்சான் மகன் பட விழாவில் எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு பேச்சு | தெலுங்கில் தனது முதல் படப்பிடிப்பை நிறைவு செய்த சோனாக்ஷி சின்ஹா | திரில்லரும் அல்ல.. பீல் குட் படமும் அல்ல.. 'தொடரும்' படம் குறித்து இயக்குனர் புது தகவல் | காருக்கு பேன்சி நம்பர் வாங்க போட்டி ; குஞ்சாக்கோ போபனுக்கு லக்.. நிவின்பாலிக்கு செக் | அஜித் குறித்து நெகிழ்ச்சி பதிவிட்ட பிரியா பிரகாஷ் வாரியர் | 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட்! | ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4, பென்ஸ்' படங்களின் நிலவரம் என்ன? | சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் |
நடிகர் ராகவா லாரன்ஸ் ஏற்கனவே ஆதரவற்ற மாற்றுத்திறனாளி குழந்தைகள் பலரை தத்தெடுத்து தனது சொந்த செலவில் படிக்க வைத்து அவர்களை ஆளாக்கி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் மாற்றம் என்கிற அறக்கட்டளையை துவங்கி அதன் மூலம் ஆரம்பத்தில் பத்து விவசாயிகளுக்கு டிராக்டர் வழங்கி அவர்களது வாழ்க்கையை மேம்படுத்த உதவி செய்து வருகிறார். இதை பின்பற்றி பலரும் ஏழை மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார்.
இந்த நிலையில் செல்வம் என்கிற ரசிகர் ஒருவர் தீபாராதனை தட்டில் சூடம் ஏற்றி அதன் அடியில் தூரிகையை ஒட்டி வைத்து அதன் மூலம் சுவற்றில் லாரன்ஸ் படத்தை வரைந்து ஆச்சரிய படுத்தியுள்ளார். அதில் அவர் லாரன்ஸை மனித ரூபத்தில் இருக்கும் கடவுள் லாரன்ஸ் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.
இதை பார்த்துவிட்டு அந்த ரசிகருக்கு பதில் அளித்துள்ள லாரன்ஸ், “உங்களுடைய கடின உழைப்பையும் திறமையையும் நான் பாராட்டுகிறேன். அதேசமயம் ஒரு சின்ன வேண்டுகோள்.. நீங்கள் சொல்வது போல நான் ஒன்றும் மனித கடவுள் அல்ல.. நான் மக்களுக்காக சேவை செய்கின்ற கடவுளின் வெறும் சேவகன் மட்டுமே. நீங்கள் இவ்வளவு பெரிய வார்த்தைகளை பயன்படுத்தியது உங்கள் அன்பை காட்டுகிறது. உங்களுடைய ஆச்சரியப்பட வைக்கும் தனி திறமைகளுக்காக உங்களை நான் விரைவில் சந்திக்கிறேன்” என்று கூறியுள்ளார்.