குரங்கு பொம்மை - மகாராஜா கிளைமாக்ஸ் ; ஒரு ஆச்சரிய ஒப்பீடு | கமல் பயோபிக்: ஸ்ருதிஹாசன் சொன்ன "நச்" பதில் | கையில் கோப்பையுடன் நீச்சல் குளத்தில் பாடகி ஜொனிதா காந்தி! | கருடன் பட வில்லன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு | உலக தந்தையர் தினம் - மகன்களுடன் விக்னேஷ் சிவன் விளையாடி மகிழும் வீடியோவை வெளியிட்ட நயன்தாரா!! | உயிர்த்தோழியை குப்பைத்தொட்டி ஆக்கிய ஜனனி! | கருடன் - 50 கோடியை நெருங்கும் வசூல்…ஆனாலும்… | 'கல்கி 2898 எடி' விழாவை பிரம்மாண்டமாக நடத்தத் திட்டம் | அல்லு அர்ஜுன் - அட்லி படம் 'டிராப்'? | விஜய் பிறந்த நாளில் ‛தி கோட்' பர்த்டே ஸ்பெஷல்! வெங்கட் பிரபு வெளியிட்ட பதிவு |
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது முன்னணி ஹாலிவுட் நடிகையாகவும் இருக்கிறார். தனது காதலர் நிக் ஜோனஸ் உடனான திருமணத்திற்குப் பிறகு ஹாலிவுட்டில் செட்டிலாகிவிட்டார். ஆஸ்கர் விருது நிகழ்வை தொகுத்து வழங்குவது உள்ளிட்ட மற்ற பணிகளிலும் பிசியாக இருக்கிறார். பல்வேறு சர்வதேச தயாரிப்புகளின் பிராண்ட் அம்பாசிடராகவும் இருக்கிறார்.
இந்த நிலையில் பிரியங்கா இத்தாலி நாட்டின் தலைநகரான ரோம் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் 358 கோடி ரூபாய் மதிப்பிலான வைர நகை அணிந்து அனைவரின் கவனத்தையும் திருப்பி இருக்கிறார். ரோமின் மிகப்பெரிய நகைக்கடையான 'பல்கேரி'யின் 140வது ஆண்டு விழா கொண்டாட்டம் நடந்தது. இந்த விழாவில் புதிய உயர்தர நகை சேகரிப்பு வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போதுதான் பிரியங்கா சோப்ரா 358 கோடி ரூபாய் வைர நகை அணிந்துள்ளார்.
இந்த விழாவில் பல்கேரி நிறுவனம் ஸ்பெஷலாக வடிவமைத்த பிரியங்காவின் இந்த நகைதான் அனைவரது கண்களையும் பறித்திருக்கிறது. 'செர்ப்பென்டி அட்ரினா' எனப் பெயர் கொண்ட இந்த நகையில் 140வது ஆண்டு விழாவை முன்னிட்டு 140 காரட் வைரங்களைக் கொண்டு சுமார் 2800 மணி நேரம் செலவழித்து இதை வடிவமைத்து இருக்கிறார்கள். இந்த நிகழ்வில் பிரியங்காவுடன் ஹத்வே, லியூ இபை போன்ற ஹாலிவுட் நடிகைகளும் கலந்து கொண்டுள்ளனர்.