பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது முன்னணி ஹாலிவுட் நடிகையாகவும் இருக்கிறார். தனது காதலர் நிக் ஜோனஸ் உடனான திருமணத்திற்குப் பிறகு ஹாலிவுட்டில் செட்டிலாகிவிட்டார். ஆஸ்கர் விருது நிகழ்வை தொகுத்து வழங்குவது உள்ளிட்ட மற்ற பணிகளிலும் பிசியாக இருக்கிறார். பல்வேறு சர்வதேச தயாரிப்புகளின் பிராண்ட் அம்பாசிடராகவும் இருக்கிறார்.
இந்த நிலையில் பிரியங்கா இத்தாலி நாட்டின் தலைநகரான ரோம் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் 358 கோடி ரூபாய் மதிப்பிலான வைர நகை அணிந்து அனைவரின் கவனத்தையும் திருப்பி இருக்கிறார். ரோமின் மிகப்பெரிய நகைக்கடையான 'பல்கேரி'யின் 140வது ஆண்டு விழா கொண்டாட்டம் நடந்தது. இந்த விழாவில் புதிய உயர்தர நகை சேகரிப்பு வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போதுதான் பிரியங்கா சோப்ரா 358 கோடி ரூபாய் வைர நகை அணிந்துள்ளார்.
இந்த விழாவில் பல்கேரி நிறுவனம் ஸ்பெஷலாக வடிவமைத்த பிரியங்காவின் இந்த நகைதான் அனைவரது கண்களையும் பறித்திருக்கிறது. 'செர்ப்பென்டி அட்ரினா' எனப் பெயர் கொண்ட இந்த நகையில் 140வது ஆண்டு விழாவை முன்னிட்டு 140 காரட் வைரங்களைக் கொண்டு சுமார் 2800 மணி நேரம் செலவழித்து இதை வடிவமைத்து இருக்கிறார்கள். இந்த நிகழ்வில் பிரியங்காவுடன் ஹத்வே, லியூ இபை போன்ற ஹாலிவுட் நடிகைகளும் கலந்து கொண்டுள்ளனர்.