முதலாம் ஆண்டு திருமண நாளில் திருமண வீடியோவை வெளியிட்ட நாக சைதன்யா, சோபிதா துலிபலா | கடைசி நேரத்தில் திடீரென தள்ளி வைக்கப்பட்ட 'அகண்டா 2' | ஏவிஎம் சரவணன் மறைவு : அஜித், விஜய், விக்ரம் அஞ்சலி செலுத்தவில்லை | மரணத்தை வைத்து மீம்ஸ் போடுவதா? ஜான்வி கபூர் கடும் ஆதங்கம்! | ஏவிஎம் சரவணன் உடல் தகனம் | உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் நானும் ஒருவன் : சரவணனுக்கு கமல் புகழ் அஞ்சலி | இந்த வார ஓடிடி ரிலீஸ்: சிறிய படங்கள் தான்....ஆனா ஒவ்வொன்னும் செம'வொர்த்'..! | 'பாகுபலி தி எபிக்' புரமோஷனுக்காக ஜப்பான் சென்ற பிரபாஸ்! | மம்முட்டியின் களம்காவல் படத்தில் 22 கதாநாயகிகள் | ஏர் இந்தியா விமான சேவை மீது சிதார் இசைக் கலைஞர் ரவிசங்கரின் மகள் குற்றச்சாட்டு |

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிம்பு தனது 48வது படத்தில் நடிக்கவுள்ளார். நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றனர் என அறிவித்து கடந்து பல மாதங்களாக இதன் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. சரித்திர பின்னணியில் உருவாகும் இந்த படம் சிம்புவின் சினிமா கேரியரில் அதிக பட்ஜெட்டில் கிட்டத்தட்ட ரூ. 100 கோடி பட்ஜெட்டில் தயாராகிறது. இதனால் இந்த படத்திற்காக ஒவ்வொரு விஷயமும் பார்த்து பாரத்து படக்குழு செய்து வருகின்றனர். இந்த படத்தில் ஒளிப்பதிவாளர் ஆக சத்யன் சூரியன் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இவர் லோகேஷ் கனகராஜின் கைதி, மாஸ்டர் உள்ளிட்ட சில படங்களில் ஒளிப்பதிவாளர் ஆக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் பெரும்பாலான காட்சிகளை பிரமாண்ட அரங்கினுள் நடத்த திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.