ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | தமிழகம் எனக்கு உறுதுணையாக உள்ளது : நன்றி சொன்ன கமல் | விஜய்சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தேவுக்கு பதிலாக நிவேதா தாமஸ்? | விக்ரம் சுகுமாரன் மறைவுக்குப் பிறகு ஓடிடியில் வெளியான மதயானை கூட்டம் | தாரே ஜமீன் பர் படத்தை யு-டியூப்பில் இலவசமாக வெளியிடும் அமீர்கான் | அறிவுரை சொல்பவர்கள் முதலில் தாங்கள் ஒழுங்கானவர்களா? : நடிகர் விநாயகன் கிண்டல் | அவசர அவசரமாக முடிக்கப்பட்ட பாலியல் வழக்குகள் ; அரசுக்கு எதிராக பார்வதி காட்டம் | ஹரி ஹர வீர மல்லு படம் தள்ளிப்போகிறதா? | ரேவதி இயக்கத்தில் பிரியாமணியின் ‛குட் ஒயிப்' | பெண் இயக்குனரின் பேண்டசி படம் 'மரகதமலை' |
செய்தி வாசிப்பாளராக இருந்து, டிவி தொடரில் கதாநாயகியாக நுழைந்து, அங்கிருந்து சினிமாவுக்கு வந்து முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் பிரியா பவானி சங்கர். அவருக்கும் அவருடன் படித்த ராஜவேல் என்பவருக்கும் ஏற்கெனவே காதல் என்பது தெரிந்த ஒன்றுதான். எப்போதாவது காதலருடன் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிடுவார் பிரியா. இன்று அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு தன் காதலைப் பற்றிய அன்பான பதிவுடன் வாழ்த்துகளை சொல்லியிருக்கிறார்.
“ஆக, இவர்தான் அவர்… எனது சிறந்த நண்பர், நாங்கள் சிரிப்போம், சண்டை போடுவோம், அழுவோம். தவறான வரிகளை நம்பிக்கையுடன் அவர் சத்தமாகப் பாடுவார். எங்களுக்குள் ஏ முதல் இசட் வரை வேறுபாடு உண்டு, ஆனாலும் அவர் என்னை நிறைவு செய்வார். நாங்கள் பொருத்தமற்றவர்கள் என்றாலும் எனக்குள் எப்போதும் அன்பாகவும், கலகலப்பாகவும், எளிமையாகவும் இருப்பார். அவருடன் இருப்பது எனக்கு வேடிக்கையாக இருக்கும், அதே சமயம் அமைதியாக அமர்ந்து, அழகான சூரிய அஸ்தமனத்தைப் பார்த்து எனது வலிகளைப் பற்றிப் பேசுவேன். இந்த வாழ்க்கையை கோடி மடங்கு ஆனந்தமாகக் கடக்க இவர் மட்டும் போதும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.