ஒரு நடிகை உருவாகிறார்...!: மனம் தளராத மவுனிகா | சுயநலவாதி என பஹத் பாசிலை விமர்சித்த காமெடி நடிகருக்கு குவியும் கண்டனம் | தர்ஷனின் கைதி எண் பொறித்த டீசர்ட் ; நடவடிக்கை எடுக்க குழந்தைகள் நல ஆணையம் வலியுறுத்தல் | திலீப் படத்தின் கதாசிரியராக மாறிய ஒரு அடார் லவ் நாயகி | வேட்டையன் டப்பிங்கை துவங்கிய பஹத் பாசில் | அட்லி இயக்கத்தில் கமல் நடிப்பது உண்மையா? | போயஸ் கார்டன் வீடு எனது 20 வருட உழைப்பிற்கு கிடைத்த பரிசு! -தனுஷ் | இந்திரஜா- கார்த்திக் தம்பதிக்கு விருந்து கொடுத்த நடிகை சுஜா வாருணி! | பிரேம்ஜிக்கா இந்த நிலைமை? வைரலாகும் வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் கமெண்ட்! | ராஜூ முருகன் இயக்கத்தில் சசிகுமார்! |
ரேடியோ மற்றும் சின்னத்திரையின் நட்சத்திர தொகுப்பாளர் ஆர்.ஜே.விஜய். தற்போது பிரமாண்ட சினிமா விழாக்களில் தொகுப்பாளராக கலக்கி வருகிறார். டான் உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவின் நண்பனாக நடித்தார். இந்த நிலையில் புதிய படம் ஒன்றில் கதை நாயகனாக நடிக்கிறார்.
இந்த படத்தை மனம் கொத்திப் பறவை, ஜிப்சி, கழுவேர்த்தி மூர்க்கன், டாடா படங்களை தயாரித்த ஒலிம்பியா பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக அஞ்சலி நாயர் நடிக்கிறார். ஹேமநாதன் என்ற புதுமுகம் இயக்குகிறார். டாடா படத்துக்கு இசையமைத்த ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். சக்திவேல் ஒளிப்பதிவு செய்கிறார். மைத்ரேயன், ரெடின் கிங்ஸ்லி, கல்யாணி நடராஜன், மேத்யூ வர்கீஸ் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
படம் குறித்து இயக்குனர் ஹேமநாதன் கூறும்போது, “இது கணவன், மனைவி இடையிலான அன்பு, ஈகோ இரண்டையும் சொல்லும் கதை. கணவனாக ஆர்ஜே விஜய், மனைவியாக அஞ்சலி நாயர் நடிக்கிறார்கள். கதைப்படி நாயகன் நிகழ்ச்சி தொகுப்பாளர். அதனால் ஆர்.ஜே.விஜையை அந்த கேரக்டரிலேயே நடிக்க வைக்கிறோம். ஹீரோயின் பாடகி. அதனால் அத்தகைய முகவெட்டு, பாடிலாங்குவேஜ் தேவைப்பட்டதால் அஞ்சலி நாயரை நடிக்க வைக்கிறோம். இது பீல் குட் படமாக இருக்கும். படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை” என்றார்.