மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்யநாராயணா, ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் இளைஞர் நல மேம்பாட்டு துறை அமைச்சரான நடிகை ரோஜாவின் தனிப்பட்ட வாழ்க்கை முறையை இழிவுபடுத்தும் விதமாக பேசினார். இதற்கு ஆந்திர மகளிர் ஆணையம் சார்பில் கண்டனம் தெரிவித்து டிஜிபிக்கு புகார் அளித்தனர். இதனையடுத்து குண்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்னாள் அமைச்சர் சத்திய நாராயணாவை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இந்த நிலையில் திருப்பதி சென்ற ரோஜா இதுகுறித்து கண்ணீர் மல்க பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: அரசியல் ரீதியாக என்னை எதிர்கொள்ள முடியாததால் காழ்ப்புணர்ச்சியுடன் என்னை பற்றி அவதூறாக பேசுகிறார்கள். உலக அளவில் அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேறி கொண்டிருக்கிறார்கள். இந்த நாட்களில் கூட இன்னும் பெண்களை அடக்குவதிலேயே தெலுங்கு தேசம் கட்சி குறியாக இருக்கிறது. ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகள் பொய்யான விமர்சனங்களால் என் பெண்மையை கேவலப்படுத்தும் விதமாக பேசிய அவரை கூட ஆதரிக்கும் கட்சி தெலுங்கு தேசம்.
பெண் இனத்தையே அவமானப்படுத்தும் படியாக அவர் பேசினார். தெலுங்கு தேசம் கட்சியில் 10 ஆண்டுகள் இருந்தேன். அந்த கட்சியில் இருந்து வெளியே வந்தது முதல் என்னை தொடர்ந்து எத்தனை விதமாக அவமானப்படுத்த முடியுமோ அவ்வளவு தூரம் அவமானப்படுத்தி வருகிறார்கள். ஆபாச படத்தில் நடித்தேன் என்று என்னை சித்ரவதை செய்கிறார்கள். சட்டமன்றத்துக்குள்கூட 'மார்பிங்' செய்த சி.டி.க்களை காட்டினார்கள். ஆனால் இதுவரை அதை நிரூபிக்கவில்லை. நான் ஆபாச படத்தில் நடித்ததாக கூறும் சி.டி.க்கள் உங்களிடம் இருந்தால் பொதுமக்களிடம் வெளியிடுங்கள்.
ரெக்கார்ட் டான்ஸ் ஆடியதாகவும் , லாட்ஜூக்கு போனதாகவும், ப்ளூ பிலிமில் நடித்ததாக மாஜி அமைச்சர் என்னை பற்றி கூறியுள்ளார். உங்கள் வீட்டில் மனைவி, மகள், மருமகள்கள் உள்ளார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நாளை இதேபோன்று உங்கள் வீட்டில் உள்ளவர்களையும் பேசுவார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தால் இவ்வாறு பேசுவீர்களா? 1999ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இருந்தபோது அக்கட்சிக்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டேன். அப்போது எனது கேரக்டர் சரியில்லை என புறக்கணிக்க வேண்டியது தானே. இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது ரோஜா கண்ணீர் விட்டு அழுததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.