நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
விழுப்புரத்தில் தீவிர ரஜினி ஆதரவாளரான ஜெயராம் என்பவரின் அண்ணாமலை ஓட்டல் திறப்பு விழாவுக்கு, ரஜினிகாந்தின் சகோதரர் சத்ய நாராயணா கலந்து கொண்டார். அப்போது விழுப்புரத்தில் சந்திராயன் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேலின் வீட்டிற்கு சென்று, அவரது தந்தை பழனிவேல் மற்றும் தாயார் ஆகியோருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் சத்ய நாராயணா நிருபர்களிடம் கூறியதாவது: விழுப்புரத்தைச் சேர்ந்த நமது வீரமுத்துவேல் ஐஎஸ்ஆர்ஓ இயக்குனராக, குழுவாக செயல்பட்டு சிறப்பாக பணியாற்றி சந்திராயனை நிலவில் இறக்கி சாதித்துள்ளார். அவரது வீட்டுக்கு வந்து அவரது பெற்றோரை சந்தித்து வாழ்த்து தெரிவித்திருக்கிறோம். அவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி.
ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது அதற்காக மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்து ரஜினி லால் சலாம் படத்தில் நடிக்கிறார். உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், ரஜினி இமயமலை செல்லும் போதும், ஆசிரமத்திற்குச் செல்லும் போதும் என பத்து ஆண்டுகளுக்கு மேலாக அவர் நண்பராக இருக்கிறார். அவர் யோகி, சன்னியாசி அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவதில் தவறு ஏதும் இல்லை. வரும் லோக்சபா தேர்தலில் ரஜினி சார்பில் யாருக்கும் ஆதரவும் இல்லை. இனிமேலும் யாருக்கும் ஆதரவு அளிக்கப் போவதுமில்லை என்றார்.