ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் | பிளாஷ்பேக் : கலோக்கியல் தலைப்பின் தொடக்கம் | தெலுங்கு கம்யூனிஸ்ட் தலைவராக நடிக்கும் கன்னட ராஜ்குமார் | யானை தந்த வழக்கு: மோகன்லாலின் உரிமம் ரத்து | கவர்ச்சிக்கு மாற நினைக்கும் கயாடு லோஹர் |

விழுப்புரத்தில் தீவிர ரஜினி ஆதரவாளரான ஜெயராம் என்பவரின் அண்ணாமலை ஓட்டல் திறப்பு விழாவுக்கு, ரஜினிகாந்தின் சகோதரர் சத்ய நாராயணா கலந்து கொண்டார். அப்போது விழுப்புரத்தில் சந்திராயன் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேலின் வீட்டிற்கு சென்று, அவரது தந்தை பழனிவேல் மற்றும் தாயார் ஆகியோருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் சத்ய நாராயணா நிருபர்களிடம் கூறியதாவது: விழுப்புரத்தைச் சேர்ந்த நமது வீரமுத்துவேல் ஐஎஸ்ஆர்ஓ இயக்குனராக, குழுவாக செயல்பட்டு சிறப்பாக பணியாற்றி சந்திராயனை நிலவில் இறக்கி சாதித்துள்ளார். அவரது வீட்டுக்கு வந்து அவரது பெற்றோரை சந்தித்து வாழ்த்து தெரிவித்திருக்கிறோம். அவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி.

ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது அதற்காக மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்து ரஜினி லால் சலாம் படத்தில் நடிக்கிறார். உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், ரஜினி இமயமலை செல்லும் போதும், ஆசிரமத்திற்குச் செல்லும் போதும் என பத்து ஆண்டுகளுக்கு மேலாக அவர் நண்பராக இருக்கிறார். அவர் யோகி, சன்னியாசி அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவதில் தவறு ஏதும் இல்லை. வரும் லோக்சபா தேர்தலில் ரஜினி சார்பில் யாருக்கும் ஆதரவும் இல்லை. இனிமேலும் யாருக்கும் ஆதரவு அளிக்கப் போவதுமில்லை என்றார்.




