'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
69வது தேசிய திரைப்பட விருதுகள் சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டன. இதில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் சிறப்பாக இசையமைத்தமைக்காக இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு புஷபா படக்குழுவினர், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் தனக்கு தேசிய விருது கிடைத்ததை அடுத்து சென்னையில் உள்ள இளையராஜா ஸ்டுடியோவிற்கு சென்ற தேவிஸ்ரீ பிரசாத், அங்கு இளையராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்றார். அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார். இளையராஜாவும், தேவிஸ்ரீபிசாத்தை வாழ்த்தினார். இதுதொடர்பாக வீடியோவை வெளியிட்டுள்ள தேவிஸ்ரீ பிரசாத், ‛‛தேசிய விருது பெறுவதற்கு வழிவகுத்த அனைத்து ஊக்கங்களும் தந்த இசைஞானி இளையராஜாவுக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.