பாலிவுட்டை திரும்பிப் பார்க்க வைத்த நயன்தாரா, ராஷ்மிகா | 5 மொழிகளில் சொந்தக் குரலில் பேசிய பிருத்விராஜ் | த்ரிஷா தானே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் : மன்சூர் அலிகானுக்கு கோர்ட் கேள்வி | இயக்குனராக தனுஷின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது | தெலுங்கில் மூத்த நடிகர்களுக்கு ஜோடியாகும் த்ரிஷா | தனுஷ் குரலில் நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் இரண்டாவது பாடல்! | சேதுவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய விக்ரம் | இரண்டு விஜய் சேதுபதி படங்களில் முக்கிய தோற்றத்தில் பப்லு பிரித்விராஜ் | காமெடி படங்கள் தான் பிடிக்கும் : பார்வதி சொல்லுகிறார் | ஆன்லைன் மோசடியை அம்பலப்படுத்தும் 'இ மெயில்' |
69வது தேசிய திரைப்பட விருதுகள் சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டன. இதில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் சிறப்பாக இசையமைத்தமைக்காக இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு புஷபா படக்குழுவினர், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் தனக்கு தேசிய விருது கிடைத்ததை அடுத்து சென்னையில் உள்ள இளையராஜா ஸ்டுடியோவிற்கு சென்ற தேவிஸ்ரீ பிரசாத், அங்கு இளையராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்றார். அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார். இளையராஜாவும், தேவிஸ்ரீபிசாத்தை வாழ்த்தினார். இதுதொடர்பாக வீடியோவை வெளியிட்டுள்ள தேவிஸ்ரீ பிரசாத், ‛‛தேசிய விருது பெறுவதற்கு வழிவகுத்த அனைத்து ஊக்கங்களும் தந்த இசைஞானி இளையராஜாவுக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.