அமெரிக்காவில் ஜாக்கி சானுடன் ஹிருத்திக் ரோஷன் சந்திப்பு | அஜித் 65வது படத்தை இயக்குவது யார்... புதிய தகவல் | பாண்டிராஜ் படத்தில் ஹரிஷ் கல்யாண்.? | மீண்டும் மோகன்லாலை இயக்கும் தருண் மூர்த்தி ; தொடரும் பட வெற்றி விழாவில் அறிவிப்பு | வி.ஜே.சித்துவின் டயங்கரம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது | 2025ல் வெளியான படங்களில் 7 மட்டுமே 100 கோடி வசூல் | நானிருக்க, இளையராஜா பாட்டு எதுக்கு: நிவாஸ் கே பிரசன்னா 'ஓபன் டாக்' | பாலிவுட் பிரபலங்களைக் கிண்டலடித்த 'காந்தரா சாப்டர் 1' வில்லன் | தமிழ் சினிமாவிற்கு புதிய வில்லன் | அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் |

69வது தேசிய திரைப்பட விருதுகள் சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டன. இதில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் சிறப்பாக இசையமைத்தமைக்காக இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு புஷபா படக்குழுவினர், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் தனக்கு தேசிய விருது கிடைத்ததை அடுத்து சென்னையில் உள்ள இளையராஜா ஸ்டுடியோவிற்கு சென்ற தேவிஸ்ரீ பிரசாத், அங்கு இளையராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்றார். அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார். இளையராஜாவும், தேவிஸ்ரீபிசாத்தை வாழ்த்தினார். இதுதொடர்பாக வீடியோவை வெளியிட்டுள்ள தேவிஸ்ரீ பிரசாத், ‛‛தேசிய விருது பெறுவதற்கு வழிவகுத்த அனைத்து ஊக்கங்களும் தந்த இசைஞானி இளையராஜாவுக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.