கலகலப்பு 3ம் பாகத்தில் மீண்டும் விமல்? | லப்பர் பந்து இயக்குனரின் அடுத்த படத்தை தயாரிக்கும் தனுஷ் பட தயாரிப்பாளர்! | மெய்யழகன் படத்துடன் இணைந்த சர்தார் 2! | நேருக்கு நேர் மோதும் அஜித், சூர்யா படங்கள்! | படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் | ஜுனியர் என்டிஆருக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண் | தெலுங்கு பட ஷூட்டிங்கில் ரச்சிதா மகாலெட்சுமி | 'சத்யா' காட்சியைப் பகிர்ந்து கவியூர் பொன்னம்மாவுக்கு கமல்ஹாசன் இரங்கல் | சுதா சந்திரன் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் குழுவினர் | சீக்கிரமே அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிடுவேன் - ராஜலெட்சுமி பேட்டி |
பிரபல ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதி. ‛சில்ரன் ஆப் ஹெவன், முகம்மது : தி மெசஞ்சர் ஆப் காட், பியாண்ட் தி கிளவுட்ஸ்' உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். சமீபத்தில் இந்தியா வந்த இவர் பாலிவுட் சினிமா பற்றி கூறுகையில், ‛‛இந்தியாவில் திரைப்படம் உருவாக்க சிறந்த திறமையும், ஆற்றலும் உள்ளது. மக்கள் தொகை அதிகம் கொண்ட நாட்டில் இங்கு சொல்லப்பட வேண்டிய கதைகள், கலாச்சாரங்கள் அதிகம் உள்ளன. ஆனால் பாலிவுட் அதை சரியாக பயன்படுத்தவில்லை. பாலிவுட் தன்னை மேம்படுத்தவில்லை என்றால் எதிர்காலத்தில் பிரச்னை தான்.
இன்றைக்கு மக்கள் சமூகவலைதளங்கள் மூலம் அனைத்து விஷயங்களையும் உடனடியாக தெரிந்து கொள்கின்றனர். இப்போது எடுப்பது போன்று இன்னும் படங்கள் எடுத்துக் கொண்டிருந்தால் எதிர்காலத்தில் ரசிகர்கள் இருக்க மாட்டார்கள். ஆகவே பாலிவுட் தன்னை மாற்றிக் கொண்டு ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்றபடி படங்களை கொடுக்க வேண்டும். இப்படி சொல்வதால் நான் பாலிவுட்டிற்கு எதிரானவன் அல்ல. அவர்கள் மாற வேண்டும் என்பதற்காக சொல்கிறேன். நிறைய திறமையான இளம் கலைஞர்கள் உள்ளனர். அவர்கள் பல அற்புதங்களை நிகழ்த்துவார்கள் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.