ஜூன் மாதத்தில் ‛சர்தார் 2' படப்பிடிப்பு முடியும் ; மாளவிகா மோகனன் | காதலிக்க நேரமில்லை, தில், ராட்சசன் - ஞாயிறு திரைப்படங்கள் | நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது |
ஆந்திர மாநிலம் வாரங்கல்லை சேர்ந்தவர் ஈஷா ரெப்பா. 'லைப் இஸ் பியூட்டிபுல்' படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். 15க்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களில் நடித்துள்ள ஈஷா தமிழில் 'ஓய்' படம் மூலம் அறிமுகமானார். நித்தம் ஒரு வானம், ஆயிரம் ஜென்மங்கள் படத்திலும் நடித்துள்ளார். தற்போது தெலுங்கில் சுதிர் பாபு ஜோடியாக 'மாயா மச்சின்திர' படத்திலும் ஜெ.டி. சக்கரவர்த்தி ஜோடியாக 'தயா' படத்திலும் நடித்து வருகிறார்.
தெலுங்கு பேசத் தெரிந்த தெலுங்கு நடிகைகளுக்கு வாய்ப்பு தராமல் மற்ற மொழி நடிகைகளுக்கே தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு தரப்படுகிறது என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
நான் தமிழ், மலையாள படங்களில் நடித்தபோது அங்குள்ளவர்கள் தெலுங்கு பட திரையுலகை பற்றி சிலாகித்து பேசுவதை கேட்டு இருக்கிறேன். ஆனால் தெலுங்கு பட உலகில் தெலுங்கு மொழி தெரியாதவர்களுக்குத்தான் அதிக வாய்ப்பு கொடுக்கிறார்கள். மற்ற மொழி கதாநாயகிகளை வைத்துத்தான் படங்கள் எடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் யாரும் கேட்பது இல்லை. அப்படி இருக்கும்போது வேற்றுமொழி நடிகர், நடிகைகளுக்கு அதிக வாய்ப்புகள் ஏன் கொடுக்கிறார்கள் என்று புரியவில்லை. இங்கு மட்டுமல்ல, மற்ற மொழி திரையுலகிலும் மொழி தெரியாதவர்களுக்குத்தான் அதிக வாய்ப்புகள் கொடுக்கிறார்கள். இந்த நிலைமை மாறவேண்டும். என்றார்.