அம்மாவாக நடிப்பது பெருமை... வயது தடையில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | பிளாஷ்பேக்: கனவில் அறிமுகமாகி, காலம் இணைத்து வைத்த காதல் மனங்களின் “மனோன்மணி” | நயன்தாரா ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' காட்சிகள்: நஷ்டஈடு கோரி மேலும் ஒரு வழக்கு | கூலி படத்திற்காக இரண்டு ஆண்டுகளாக கடின உழைப்பை போட்ட லோகேஷ் கனகராஜ் | ‛டிமான்டி காலனி 3' படப்பிடிப்பை தொடங்கிய அஜய் ஞானமுத்து | முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு |
தனது தனது பிரம்மாண்ட படைப்புகளால் தென்னிந்தியாவையும் தாண்டி பாலிவுட் வரை திரையுலகினரையும் சரி ரசிகர்களையும் சரி பிரமிக்க வைக்கும் விதமாக படங்களை கொடுத்து வருபவர் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி. கடந்த வருடம் இவருடைய இயக்கத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன் நாட்டு நாட்டு பாடலுக்காக ஆஸ்கர் விருதையும் பெற்று பெருமை சேர்த்தது.
இந்த படத்தின் ரிலீஸை தொடர்ந்து ஆஸ்கர் விருது பெற்று திரும்பும் வரை பல வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வந்தார் ராஜமவுலி. இந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டில் தனக்கு மிகவும் பிடித்த இடமான தூத்துக்குடிக்கு தனது குடும்பத்துடன் சுற்றுலா வந்து சென்றுள்ளார் ராஜமவுலி. அவரது மனைவி ரமா, மகன் கார்த்திகேயா, மருமகள் பூஜா, மகள் மயூரா உள்ளிட்டோருடன் தூத்துக்குடியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் சில நாட்கள் தங்கி இந்த சுற்றுலாவை அனுபவித்துள்ளார் ராஜமவுலி.
அங்கே தங்கி இருந்தபோது இந்த ரிசார்ட்டில் தான் வந்து சென்றதன் நினைவாக மரக்கன்று ஒன்றையும் நட்டு வைத்துள்ளார் ராஜமவுலி. அங்கே தங்கி இருந்தபோது அவர்களை உபசரிக்கும் பொறுப்பை ஏற்றிருந்தத்த அனைனா மேத்யூ என்கிற பெண் இது குறித்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டு, “ராஜமவுலி சாரின் குடும்பத்திற்கு விருந்தோம்பல் செய்யும் வாய்ப்பு கிடைத்ததை மிகப்பெரிய கவுரமாக கருதுகிறேன்” என்று கூறியுள்ளார்.