'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

தனது தனது பிரம்மாண்ட படைப்புகளால் தென்னிந்தியாவையும் தாண்டி பாலிவுட் வரை திரையுலகினரையும் சரி ரசிகர்களையும் சரி பிரமிக்க வைக்கும் விதமாக படங்களை கொடுத்து வருபவர் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி. கடந்த வருடம் இவருடைய இயக்கத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன் நாட்டு நாட்டு பாடலுக்காக ஆஸ்கர் விருதையும் பெற்று பெருமை சேர்த்தது.
இந்த படத்தின் ரிலீஸை தொடர்ந்து ஆஸ்கர் விருது பெற்று திரும்பும் வரை பல வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வந்தார் ராஜமவுலி. இந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டில் தனக்கு மிகவும் பிடித்த இடமான தூத்துக்குடிக்கு தனது குடும்பத்துடன் சுற்றுலா வந்து சென்றுள்ளார் ராஜமவுலி. அவரது மனைவி ரமா, மகன் கார்த்திகேயா, மருமகள் பூஜா, மகள் மயூரா உள்ளிட்டோருடன் தூத்துக்குடியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் சில நாட்கள் தங்கி இந்த சுற்றுலாவை அனுபவித்துள்ளார் ராஜமவுலி.
அங்கே தங்கி இருந்தபோது இந்த ரிசார்ட்டில் தான் வந்து சென்றதன் நினைவாக மரக்கன்று ஒன்றையும் நட்டு வைத்துள்ளார் ராஜமவுலி. அங்கே தங்கி இருந்தபோது அவர்களை உபசரிக்கும் பொறுப்பை ஏற்றிருந்தத்த அனைனா மேத்யூ என்கிற பெண் இது குறித்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டு, “ராஜமவுலி சாரின் குடும்பத்திற்கு விருந்தோம்பல் செய்யும் வாய்ப்பு கிடைத்ததை மிகப்பெரிய கவுரமாக கருதுகிறேன்” என்று கூறியுள்ளார்.




