கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் | பிளாஷ்பேக்: ஒரே நாளில் வெளியான 3 வெற்றிப் படங்கள்: யாராலும் முறியடிக்க முடியாத மோகனின் சாதனை | பிளாஷ்பேக்: சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட முதல் தென்னிந்திய படம் | ரஜினியின் 173வது படத்தை இயக்கப் போவது யார்? |
தனது தனது பிரம்மாண்ட படைப்புகளால் தென்னிந்தியாவையும் தாண்டி பாலிவுட் வரை திரையுலகினரையும் சரி ரசிகர்களையும் சரி பிரமிக்க வைக்கும் விதமாக படங்களை கொடுத்து வருபவர் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி. கடந்த வருடம் இவருடைய இயக்கத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன் நாட்டு நாட்டு பாடலுக்காக ஆஸ்கர் விருதையும் பெற்று பெருமை சேர்த்தது.
இந்த படத்தின் ரிலீஸை தொடர்ந்து ஆஸ்கர் விருது பெற்று திரும்பும் வரை பல வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வந்தார் ராஜமவுலி. இந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டில் தனக்கு மிகவும் பிடித்த இடமான தூத்துக்குடிக்கு தனது குடும்பத்துடன் சுற்றுலா வந்து சென்றுள்ளார் ராஜமவுலி. அவரது மனைவி ரமா, மகன் கார்த்திகேயா, மருமகள் பூஜா, மகள் மயூரா உள்ளிட்டோருடன் தூத்துக்குடியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் சில நாட்கள் தங்கி இந்த சுற்றுலாவை அனுபவித்துள்ளார் ராஜமவுலி.
அங்கே தங்கி இருந்தபோது இந்த ரிசார்ட்டில் தான் வந்து சென்றதன் நினைவாக மரக்கன்று ஒன்றையும் நட்டு வைத்துள்ளார் ராஜமவுலி. அங்கே தங்கி இருந்தபோது அவர்களை உபசரிக்கும் பொறுப்பை ஏற்றிருந்தத்த அனைனா மேத்யூ என்கிற பெண் இது குறித்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டு, “ராஜமவுலி சாரின் குடும்பத்திற்கு விருந்தோம்பல் செய்யும் வாய்ப்பு கிடைத்ததை மிகப்பெரிய கவுரமாக கருதுகிறேன்” என்று கூறியுள்ளார்.