பாலிவுட்டை திரும்பிப் பார்க்க வைத்த நயன்தாரா, ராஷ்மிகா | 5 மொழிகளில் சொந்தக் குரலில் பேசிய பிருத்விராஜ் | த்ரிஷா தானே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் : மன்சூர் அலிகானுக்கு கோர்ட் கேள்வி | இயக்குனராக தனுஷின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது | தெலுங்கில் மூத்த நடிகர்களுக்கு ஜோடியாகும் த்ரிஷா | தனுஷ் குரலில் நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் இரண்டாவது பாடல்! | சேதுவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய விக்ரம் | இரண்டு விஜய் சேதுபதி படங்களில் முக்கிய தோற்றத்தில் பப்லு பிரித்விராஜ் | காமெடி படங்கள் தான் பிடிக்கும் : பார்வதி சொல்லுகிறார் | ஆன்லைன் மோசடியை அம்பலப்படுத்தும் 'இ மெயில்' |
பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் என்ற படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்தார். அப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில், அடுத்தபடியாக பார்த்திபன் ‛டீன்' என்ற பெயரில் 13 முதல் 15 வயதுடைய சிறுவர்கள் சம்பந்தப்பட்ட கதையில் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். அந்த படத்திற்கு இசையமைக்க அவர் ஏ. ஆர். ரகுமானை தொடர்பு கொண்டபோது, தற்போது வேலைப்பளு அதிகமாக இருப்பதால் தற்போதைக்கு உங்கள் படத்துக்கு இசையமைக்க முடியாது என்று தெரிவித்தவர், பார்த்திபன் இயக்கும் படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
ஏ.ஆர்.ரகுமானின் அந்த பதிவை தொடர்ந்து தனது டுவிட்டரில் பார்த்திபன் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், பழகுதல் காதலால் விலகுதலும் காதலால் ஆதலால், ஒருவரை ஒருவர் போற்றி மகிழ்வோம். இறுதிவரை வரும் படத்திலும் இருவரும் இணைவோம் என நினைத்து இயலாதபோது நண்பர் ஏஆர்ஆர் அவரிடமிருந்து வந்த மிருது மெயில் என்று பதிவிட்டுள்ளார் பார்த்திபன்.