சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் என்ற படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்தார். அப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில், அடுத்தபடியாக பார்த்திபன் ‛டீன்' என்ற பெயரில் 13 முதல் 15 வயதுடைய சிறுவர்கள் சம்பந்தப்பட்ட கதையில் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். அந்த படத்திற்கு இசையமைக்க அவர் ஏ. ஆர். ரகுமானை தொடர்பு கொண்டபோது, தற்போது வேலைப்பளு அதிகமாக இருப்பதால் தற்போதைக்கு உங்கள் படத்துக்கு இசையமைக்க முடியாது என்று தெரிவித்தவர், பார்த்திபன் இயக்கும் படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
ஏ.ஆர்.ரகுமானின் அந்த பதிவை தொடர்ந்து தனது டுவிட்டரில் பார்த்திபன் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், பழகுதல் காதலால் விலகுதலும் காதலால் ஆதலால், ஒருவரை ஒருவர் போற்றி மகிழ்வோம். இறுதிவரை வரும் படத்திலும் இருவரும் இணைவோம் என நினைத்து இயலாதபோது நண்பர் ஏஆர்ஆர் அவரிடமிருந்து வந்த மிருது மெயில் என்று பதிவிட்டுள்ளார் பார்த்திபன்.




