எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
யஷ் நாயகனாக நடிக்க, ஸ்ரீநிதி ஷெட்டி நாயகியாக நடிக்க, பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எப்., முதல் மற்றும் இரண்டாம் பாகம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதன் 2ம் பாகம் வெளியாகி ஓராண்டு நிறைவு பெற்றதை படக்குழு நினைவு கூர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், 1978 - 81 வரை ராக்கி எங்கே இருந்தார்? என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது. இதனால் கேஜிஎப் 3 பட கதை 1978-81 காலக்கட்டங்களில் நடக்கும் படமாக உருவாக உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இதையடுத்து மூன்றாம் பாகம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கே.ஜி.எப்., ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர். தற்போது 3ம் பாகத்திற்கான திரைக்கதைப்பணியில் பிரசாந்த் நீல் ஈடுபட்டுள்ளார். தற்போது பிரபாஸின் சலார் படத்தை இயக்கி வருகிறார் பிரசாந்த் நீல். இந்த பட பணிகள் முடிந்ததும் கே.ஜி.எப் 3 பட பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.