அஜித் - ஷாலினியின் ரொமான்ட்டிக் போட்டோ வைரல் | 'மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட்' கோவை குணா காலமானார் | லண்டனில் ‛பொன்னியின் செல்வன் 2' பின்னணி இசை மும்முரம் | தியேட்டரில் டிக்கெட் விற்பனை செய்த நிவேதா பெத்துராஜ் | 'ஆர்ஆர்ஆர்' ஆஸ்கர் விருதுக்காக நான் செலவு செய்யவில்லை - தயாரிப்பாளர் டிவிவி தனய்யா | சிரஞ்சீவியின் சகோதரர் மகள், கணவருடன் கருத்து வேறுபாடு? | பெண் அரசியல்வாதி என்றால் சேலை தான் கட்ட வேண்டுமா? - மஞ்சு வாரியர் | பிறக்கும்போதே பெற்றோரை குழப்பி விட்டேன் ; ராணி முகர்ஜி கலாட்டா | 130 பேருக்கு 10 கிராம் தங்கம் கொடுத்த கீர்த்தி சுரேஷ் | ஏழைகளுக்கு இலவச இருதய சிகிச்சை அறிவித்த பாலகிருஷ்ணா |
சின்னத்திரை இயக்குநர் திருச்செல்வம் தான் இயக்கி வரும் சீரியல்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இல்லத்தரசிகள் மனதில் இடம்பிடித்து வருகிறார். அவர் இயக்கிய தொடர்களில் 'கோலங்கள்', 'அல்லி ராஜ்ஜியம்', 'மாதவி', 'சித்திரம் பேசுதடி' வரிசையில் 'எதிர்நீச்சல்' தொடர் ஆணாதிக்க சிந்தனையை எதிர்த்து குடும்ப பெண்கள் வெற்றியடைவதை கதைக்களமாக கொண்டுள்ளது. இந்த தொடர் ஒளிபரப்பான முதல் நாளிலிருந்தே கொஞ்சம் கூட தொய்வு ஏற்படாமல் விறுவிறுப்பான திரைக்கதையுடன் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இந்நிலையில், இந்த தொடரை நிறுத்த சொல்லி ஒரு ரசிகையின் கணவர் திருச்செல்வத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், 'எதிர்நீச்சல் சீரியலை உடனடியாக நிறுத்துங்கள். என்னுடைய மனைவி தினமும் உங்கள் சீரியலை பார்த்துவிட்டு என்னை குணசேகரனாகவும், அவளை ஜனனியாகவும் நினைத்து கொள்கிறாள். அவள் நடவடிக்கைகளும் மொத்தமாக மாறிவருகிறது' என்று குறிப்பிட்டுள்ளாராம். இதுகுறித்து அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய திருச்செல்வத்தின் வீடியோ வைரலாகி வருகிறது. மேலும், அந்த பேட்டியில் 'இதுபோன்ற கருத்துகள் வருவது சகஜம் தான். ஆனால், நான் சீரியலை நிறுத்தப்போவதில்லை' என்று கூறியுள்ளார்.