மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? | டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா |

சின்னத்திரை இயக்குநர் திருச்செல்வம் தான் இயக்கி வரும் சீரியல்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இல்லத்தரசிகள் மனதில் இடம்பிடித்து வருகிறார். அவர் இயக்கிய தொடர்களில் 'கோலங்கள்', 'அல்லி ராஜ்ஜியம்', 'மாதவி', 'சித்திரம் பேசுதடி' வரிசையில் 'எதிர்நீச்சல்' தொடர் ஆணாதிக்க சிந்தனையை எதிர்த்து குடும்ப பெண்கள் வெற்றியடைவதை கதைக்களமாக கொண்டுள்ளது. இந்த தொடர் ஒளிபரப்பான முதல் நாளிலிருந்தே கொஞ்சம் கூட தொய்வு ஏற்படாமல் விறுவிறுப்பான திரைக்கதையுடன் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இந்நிலையில், இந்த தொடரை நிறுத்த சொல்லி ஒரு ரசிகையின் கணவர் திருச்செல்வத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், 'எதிர்நீச்சல் சீரியலை உடனடியாக நிறுத்துங்கள். என்னுடைய மனைவி தினமும் உங்கள் சீரியலை பார்த்துவிட்டு என்னை குணசேகரனாகவும், அவளை ஜனனியாகவும் நினைத்து கொள்கிறாள். அவள் நடவடிக்கைகளும் மொத்தமாக மாறிவருகிறது' என்று குறிப்பிட்டுள்ளாராம். இதுகுறித்து அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய திருச்செல்வத்தின் வீடியோ வைரலாகி வருகிறது. மேலும், அந்த பேட்டியில் 'இதுபோன்ற கருத்துகள் வருவது சகஜம் தான். ஆனால், நான் சீரியலை நிறுத்தப்போவதில்லை' என்று கூறியுள்ளார்.