Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வீரப்பன் வெப் தொடருக்கு விதித்த தடை நீக்கம்

22 நவ, 2022 - 01:41 IST
எழுத்தின் அளவு:
Relief-for-Veerappan-webseries

ராஜீவ் கொலையாளிகள் பற்றி குப்பி என்ற படத்தை இயக்கிய ஏ.எம்.ஆர். ரமேஷ், சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை வனயுத்தம் என்ற பெயரில் திரைப்படமாக இயக்கினார். அவர் தற்போது வீரப்பனின் கதையை 'வீரப்பன் : ஹங்கர் பார் கில்லிங்' என்ற பெயரில் வெப் தொடராக இயக்கி வருகிறார்.

இந்த தொடருக்கு தடைகேட்டு வீரப்பன் மனைவி முத்துலட்சுமி பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனை விசாரித்த நீதிமன்றம் வீரப்பன் வெப் தொடருக்கு இடைக்கால தடை விதித்து. இதனால் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று இந்த தடையை நீக்கியதோடு முத்துலட்சுமி தொடர்ந்த வழக்கையும் தள்ளுபடி செய்தது.

இதுகுறித்து ஏ.எம்.ஆர் ரமேஷ் கூறியிருப்பதாவது : வன யுத்தம் படத்தில் வீரப்பன் வாழ்க்கை கதையை முழுமையாக வெளிப்படுத்த முடியவில்லை. நிறைய காட்சிகளை தணிக்கை குழுவினர் நீக்கிவிட்டனர். இதனால்தான் வீரப்பன் கதையை வெப் தொடராக எடுக்கிறேன். 20 எபிசோட்களை கொண்ட தொடராக இது தயாராகிறது. வெப் தொடருக்கு தணிக்கை இல்லை என்பதால் வீரப்பனின் முழு வாழ்க்கையையும் தொடரில் கொண்டு வருவேன்.

இந்த தொடரில் வீரப்பன் கதாபாத்திரத்தில் கிஷோர் நடிக்கிறார். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இந்த தொடர் வெளிவரும். வனயுத்தம் படத்திற்கு எதிராக முத்துலட்சுமி உச்சநீதிமன்றம் வரை சென்றார். உச்சநீதிமன்றம் அவருக்கு 25 லட்சம் இழப்பீடு தொகை கொடுக்க உத்தரவிட்டது. நானும் அதை கொடுத்துவிட்டேன். இதன் மூலம் வீரப்பன் கதையை படமாகவோ, தொடராகவோ எப்படி வேண்டுமானாலும் படமாக்க எனக்கு உரிமை இருக்கிறது. அதனால்தான் இப்போது முத்துலட்சுமி தொடர்ந்து வழக்கையும் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. இதுவரை 6 எபிசோட்களின் பணி முடிந்திருக்கிறது. அடுத்த வாரம் முதல் மீண்டும் படப்பிடிப்பு தொடங்குகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இனியா நடித்த காபி : நேரடியாக டிவியில் வெளியாகிறதுஇனியா நடித்த காபி : நேரடியாக டிவியில் ... யாராலும் ஜல்லிக்கட்டு விளையாட்டை அழிக்க முடியாது : சசிகுமார் யாராலும் ஜல்லிக்கட்டு விளையாட்டை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in